டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரில் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கேத்வின், கேத்ரீன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் கேத்ரீன் (4) பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைச்சாக சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் கேத்ரீனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications