விவாகரத்து இருக்கட்டும்.. தேர்தல் வேலையில் விஜய் தீவிரம்.. மார்ச் 10 முதல் வேட்பாளர் நேர்காணல்!
சென்னை: நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தாலும், கட்சிப் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் அடுத்தகட்டமாக வேட்பாளர் தேர்வில் அவர் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி சில நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களுக்கு போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் சில வாக்குறுதிகளை நேற்று மகளிர் தின நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.

மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2500, வ்ருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம், திருமணம் ஆக இருக்கும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை என ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் விஜய்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தவெக தலைவர் விஜய் எங்கு நிற்கப்போகிறார். தவெகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 10) முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை விநியோகம் செய்தது தவெக. விருப்ப மனு விநியோகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மனுக்கள் தீர்ந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு நேர்காணல் எப்போது தொடங்கும் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், வரும் 10 ஆம் தேதி முதல் தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன்படி, அவர் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தியாகராய நகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், அருண் ராஜ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
-
2026 தேர்தல் களம்.. மக்களுக்கு அட்வைஸ்! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்.. அடுத்த பஞ்சாயத்து -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
இன்னுமா என்னை யாருனு தெரியலை.. கோபியில் செங்கோட்டையன் பக்கா பிளான்.. எடப்பாடிக்கு செக் -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
ஆள் இல்லை.. களம் தெரியவில்லை.. விஜயும் கண்டுக்கல.. பிரச்சாரத்தில் சொதப்பும் தவெக.. பின்னணி -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன்












Click it and Unblock the Notifications