அமமுகவை சகட்டு மேனிக்கு விளாசிய அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியே கிடையாது என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், படுதோல்வியை சந்தித்தது. எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாததோடு, ஓட்டு விகிதமும் மிகவும் சரிந்துவிட்டது.
இந்த நிலையில், சென்னையில், இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:

அதிமுக திரும்புங்கள்
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது ஒரு கட்சியே கிடையாது. அதை ஒரு குழு என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம். அது ஒரு லெட்டர் பேடு கட்சி. கடலில் கரைத்த பெருங்காயம் போல அதன் நிலைமை மாறிவிட்டது.

7 தமிழர் விடுதலை
தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும். சஞ்சய்தத் வழக்கு என்பது வேறு, 7 தமிழர் விடுதலை என்பது வேறு, எனவே இரண்டையும் ஒன்றாக கருத முடியாது.

கூடங்குளம் அணுக்கழிவு
கூடங்குளம் அணுக்கழிவு திட்ட விவகாரத்தில், ஜூலை 10 ஆம் தேதியன்று, பொதுமக்களின் கருத்து கேட்புக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. பொதுமக்கள்தான், அதில் கருத்து சொல்ல வேண்டுமே தவிர, நாங்கள் அதற்கு முன்பாக கருத்து சொல்வது சரியாக இருக்காது.

பாரதியார் தலைப்பாகை
பாரதியார் தலைப்பாகை தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. அதுவே போதும் என்று நினைக்கிறேன். கோடைக்கால வறட்சியாக இருந்தாலும், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளமாக இருந்தாலும், சிறப்பாக அவற்றை கையாண்டது இந்த அரசுதான். ஏற்கனவே முதலமைச்சர் ஆய்வு நடத்தி குடிநீர் பஞ்சம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மரங்களை அதிகமாக நடுங்கள், மழை பெய்ய வேண்டும் என்று, இறைவனை, வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
எடப்பாடி பழனிசாமி பட்ட பாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
"தவெக உடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை”.. பட்டென சொன்ன எடப்பாடி பழனிசாமி -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட்












Click it and Unblock the Notifications