அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகள்...டிடிவி தினகரன் அறிக்கை வெளியீடு!!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக ஏ.கிங்ஸ்லி ஜெரால்டு, கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளராக கே. சீனிராஜ் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இதுவரை தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பிலிருந்து கே. சீனிராஜ் விடுவிக்கப்படுகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக,பி. விஜயபாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டசபை தொகுதி
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை மத்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள் மறுசீரமைக்கப்படுகிறது. இதன்படி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தின் கீழ் ஆரணி சட்டசபை தொகுதி, செய்யாறு சட்டசபை தொகுதி, வந்தவாசி சட்டசபை தொகுதி, திருவண்ணாமலை மத்திய மாவட்டத்தின் கீழ் திருவண்ணாமலை சட்டசபை தொகுதி, கலசப்பாக்கம் சட்டசபை தொகுதி, போளூர் சட்டசபை தொகுதி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் கீழ் செங்கம் சட்டசபை தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் சட்டசபை தொகுதி ஆகியவை கொண்டு வரப்படுகின்றன.

மூவர் தேர்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்புக்கு மா.கி.வரதராஜன்
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்புக்கு ஏ.ஜி.பஞ்சாட்சரம்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்புக்கு செங்கம் ஏ.பரந்தாமன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநில கழக இணை செயலாளராக பா.விமலாஸ்ரீ, துணை செயலாளராக ஜெ.தமிழரசி நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை புதுச்சேரி மாநில கழக இணை செயலாளர் பொறுப்பிலிருந்து மூ.லாவண்யா அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் ஆர்சிஎம் மஞ்சுளா சந்திரமோகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

உத்தரவு
கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications