சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரை நிர்வாணத்தில்.. சங்குகள் ஒலிக்க.. சிஷ்யையை திருமணம் செய்த "அகோரி பாபா".. திருச்சியில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சியை சேர்ந்த பிரபல அகோரி சாமியார் ஒருவர் நேற்று தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் அகோரி பாபா மணிகண்டன். காசிக்கு தனது இளம் வயதில் சென்றவர் அங்கேயே தங்கி சாமியார்களோடு சாமியாராக சில காலம் இருந்தார்.

போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு

காசியில் இருக்கும் அகோரிகளுடன் தங்கி இருந்தவர், அவர்களின் வாழ்க்கை முறை பிடித்து போய், சிவ பக்தனாக மாறி, அவர்களோடு சேர்ந்த அகோரி பயிற்சி எடுத்தார்.

காசி

காசி

காசியில் தங்கி இருந்து சில வருடங்களுக்கு முன் அகோரி ஆன மணிகண்டன் அதன்பின் மற்ற சில அகோரிகளோடு சேர்ந்து தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சுடுகாட்டில் தங்கி இருந்தவர் திருச்சிக்கு இடம் பெயர்ந்து அங்கு தனது சொந்த ஊரான அரியமங்கலம் அருகே மக்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். இரவில் அடிக்கடி இவர் சுடுகாட்டில் பூஜை செய்வது வழக்கம்.

பயிற்சி

பயிற்சி

இவரை சந்திக்க வந்த பலரை சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்டு திருச்சிலேயே அவர்களை தங்க வைத்து பலருக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். சமீபத்தில் இவரின் சிஷ்யர் விபத்தில் பலியானார். பலியானவரின் உடலுக்கு அகோரி மணிகண்டன் திருச்சியில் இறுதி சடங்கு நடத்தியது பெரிய அளவில் வைரலானது.

பூஜை

பூஜை

இறந்து போன தனது சிஷ்யரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் விசித்திர பூஜை செய்தார். மணிகண்டன் நடத்திய இந்த ஆன்ம சாந்தி பூஜை இணையம் முழுக்க வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அகோரி சாமியார் மணிகண்டன் நேற்று தனது சிஷ்யயை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்

திருமணம்

இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சிஷ்யையாக பயிற்சி எடுத்து வந்தார். கடந்த சில காலமாக பிரியங்கா மணிகண்டனுடன் சேர்ந்து பயிற்சி எடுத்து வந்தார். இதில் பிரியங்கா மீது காதல் வயப்பட்ட அகோரி சாமியார் மணிகண்டன் இன்று கோவிலில் வைத்து பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி மந்திரம் ஓத திருமணம் செய்து கொண்டார்.

மற்ற அகோரிகள்

மற்ற அகோரிகள்

இவரின் அருகில் இருந்த மற்ற அகோரிகள் சங்குகள் ஊதி திருமணத்தை நடத்தி வைத்தனர். உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார். இந்த திருமணம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
An Man who turned Aghori married his Female Sishya in Trichy today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X