பரந்தூர் விமான நிலையம்.. மீண்டும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசு.. முக்கிய அப்டேட்!
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காக மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 196 சர்வே எண்களில் இருக்கும் வீட்டுமனைகளை கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்தடுத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையின் 2வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அண்மையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல் விமான நிலையத் திட்டம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கொள்கை அனுமதிகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து அனுமதி கிடைத்த பின், கட்டுமான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் விமான நிலைய கட்டுமானத்தை 4 கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடி வரும் மக்களின் போராட்டம் ஆயிரம் நாட்களை கடந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்சித் தலைவர்கள் பயணம் மேற்கொண்டு அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, புதிய விமான நிலையத்தை மாற்று இடத்தில் செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை சார்பாக நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 196 சர்வே எண்களில் இருக்கும் வீட்டுமனைகளை கையகப்படுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், 5,746 ஏக்கரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக, பல கட்டங்களாக அரசு நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.
-
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications