அண்ணாமலை படத்தில் "கடவுளே கடவுளே"! பாம்பு சீன் ஞாபகம் இருக்கா? வாயே தைக்காத பாம்பாமே! சுவாரஸ்யம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாம்பு சீன் குறித்த சுவாரஸ்ய சம்பவங்கள் தெரியுமா?

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சினிமால எந்த ஒரு நடிகரும் ஒரு புதிய காட்சி நடிக்க பழைய படங்களில் போய் ரெஃபரன்ஸ் தேடுவாங்க... சிவாஜி சார் படங்களை பார்த்தாலே எந்தக் காட்சிக்கும் ரெஃபரன்ஸ் கிடைக்கும். மனைவி இறந்ததும் அழும் காட்சியை பல படங்களில் பல விதமா சிவாஜி செய்திருப்பார்.

 An interesting facts about Annamalai snake scene by Rajinikanth

நவீன நடிகர்கள் ஹாலிவுட் படங்களை கூட எடுத்துக்குவாங்க. அப்படி ஒரு சீன் தான் அண்ணாமலை படத்தின் பாம்பு சீன். பாம்பு மேலே ஊர்ந்து போகும் போது நமக்கு ஒரு வித உணர்வு வருமே. அதை கூச்சம் என்பதா? பயம் என்பதா? அருவறுப்பு என்பதா? இல்லை. இவை மூன்றும் கலந்த உணர்வு என்பதா?

பாம்பு படம்: ரெஃபரன்ஸ் தேடினா நிறைய டார்ஸான் ஸ்டைல் படங்களில் மலைப் பாம்பு ஊர்வதாக அப்படத்தின் நாயகி நடிச்சிருப்பாங்க. ஆனா நடிப்பு பயம் மட்டுமே. இப்போ ரஜினிக்கு முன்னே இருக்கும் சவால் இதில் எப்படி எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுவது. அண்ணாமலை படத்தின் முதல் காட்சியே இது தான் படப்பிடிப்புக்கு. ரஜினி மேலே பாம்பு ஊர்ந்து போனதும் ரஜினி ஒரு ஆக்ஷன் கொடுப்பார் பாருங்க.

பயத்தை காட்டாதே: முன்னால இருக்கும் பெண்கள் கிட்ட பயத்தை காட்டக் கூடாது. அதோடு பாம்பு ஊர்வதால் கூச்சம் வேறு. உள்ளுக்குள்ள பயம். மிக மிக அற்புதமாக அந்த காட்சியில் நடித்தார். தியேட்டரில் பார்க்கும் போது ஒரு புதுவிதமான நடிப்பை பார்த்ததும் கை தட்டல். அவர் குரல் கூட பயத்தில் பேச முயற்சித்து கம்மிப் போய் வார்த்தைகள் வராமல் அவர் தடுமாறி உளறுவது போல...செமல...

ரியாக்ஷன்தான் சூப்பர்: ரியாக்ஷன் தானே நாம கொடுத்திருப்போம் நம்ம மேலே பாம்பு ஊர்ந்தால்... இந்த காட்சி இயக்குனர் நடித்துக் காட்ட முடியாத காட்சி இல்லையா? ரஜினியோட நடிப்பு அவரே கிரஹித்து உருவாக்கிய நடிப்பு. இதே படத்தை 'கொண்டப்பள்ளி ராஜா' படத்தில் வெங்கடேஷ் நடித்தார். அவர் அப்படியே ரஜினியை இமிட்டேட் பண்ணி நடித்திருப்பார். சில ஷாட்டுகள் பாம்பு அவர் மேலே இல்லாமல் ஒப்பேற்றி எடுத்திருப்பார்.

ஓவர் காப்பி: ரீரெக்கார்டிங் ரஜினியை காப்பி பண்ணினாலும் ஓவரா பேசுவதாக இருக்கும். பாம்புன்னா பேச்சே வராதே...'கோகர்ணா' அப்படிங்கிற கன்னட ரீக்கில் 'உங்க பாம்பே வேணாம்டா'ன்னு எக்ஸ்பிரஷனே வராத உபேந்திரா வண்ணத்துப் பூச்சியை துரத்திட்டு போய் பாத்ரூம் ஓட்டு மேலே ஏறி உள்ளே விழுந்து தொடையில் நிற்கும் வண்ணத்துப்பூச்சியை தொட்டுன்னு வேற மாதிரி எடுத்திருப்பார்.

அண்ணாமலை ரஜினி: பாம்பு சீன் இனி யார் நடித்தாலும் அண்ணாமலை ரஜினி மாதிரி தான் நடிக்க முடியும். அவ்வளவு அட்டகாசமான சீன்....அந்த 'கடவுளே...கடவுளே..' காமெடி கூட ரஜினியோட ஐடியா தானாம்..கொடுமை என்னன்னா பாம்போட வாயை தைக்கவில்லைன்னு சுரேஷ் கிருஷ்ணாவே சொல்லி இருக்கார்... யோசிச்சு பாருங்க.. இதை வேற நடிகர் வேற மாதிரி எப்படி பண்ண முடியும்?. இவ்வாறு செல்வன் அன்பு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+