இதுவும் பெஸ்ட் சேவிங்க்ஸ்! SIP இல் மாதம் ரூ. 8300 கட்டினால் கையில் சொளையா ரூ. 1.50 கோடி
சென்னை: மாதம் ரூ 8,300 எஸ்ஐபியில் கட்டினால் உங்களுக்கு 10 ஆண்டுகள் கழித்து 19 லட்சம் ரூபாய் கிடைக்கும் என பொருளாதார நிபுணர் தெரிவிக்கிறார்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். அது போல் சம்பாதிக்கும் பணத்தில் எதிர்காலத்திற்கு என சேமித்து வைப்பது அவசியம். சேமிப்பு என்பது பணத்தில் மட்டுமில்லை, தண்ணீர், மளிகை பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட எல்லாவற்றிலும் இருக்க வேண்டும்.

நாம் சேமிக்க தெரிந்து கொண்டால்தான் அது குழந்தைகளும் கற்று கொள்வார்கள். அந்த வகையில் குழந்தைகளின் திருமணத்திற்கு, கல்விக்கு, என மொத்தமாக பணத்தை புரட்ட முடியாத நிலையில் உள்ளவர்கள், மாத சம்பளம் வாங்கும் முதல் மாதத்திலிருந்தே வருங்காலத்திற்கு சேமித்து வைக்கலாம்.
அந்த வகையில் பொருளாதார நிபுணர் ராஜேஷ் சில வழி முறைகளை கூறியிருந்தார். அதில் குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்க, கார் வாங்க, விடுமுறைக்கு வெளிநாடு செல்ல, ஓய்வு காலத்தில் கையில் பணம் கிடைக்க என பல்வேறு விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அது போல் சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களையும் நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் எஸ்ஐபியில் மற்றொரு பிளானையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது Guaranteed income வேண்டுமென்றால் எஸ்ஐபியில் மாதம் 8300 ரூபாய் செலுத்தினால் அதற்கு வட்டி 12 சதவீதம் கிடைக்கும். 10 ஆண்டுகள் கழித்து நாம் செலுத்திய பணம் 9.96 லட்சம், வட்டி ரூ 9.32 லட்சம் ஆக மொத்தம் ரூ 19.28 லட்சம் கிடைக்கும்.
அப்படியே அந்த 19 லட்சத்தை Systematic Withdrawal Plan இல் 25 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் எடுத்துக் கொண்டே வந்தால், 26 ஆவது வருஷம் நீங்கள் எடுத்த பணம் போக உங்களிடம் 1.54 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட காலத்துக்கு முதலீடு பண்ணும்போது, உங்களுக்கு லாபம் நிச்சயம். 10 வருடம் கழித்து நீங்க எடுக்கும்போது சந்தை அதல பாதாளத்துல இருந்தாலும், உங்க லாபம் தான் குறையுமே தவிர நஷ்டம் வராது என தெரிவித்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications