Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை சென்ட்ரலில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த இளம் பெண்.. கடவுளாக வந்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் சட்டென தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற நபரும் தவறி விழுந்த நிலையில் அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

ஓடும் ரயில்களில் ஏறவோ இறங்கக்கூடாது என்ற எல்லாருக்கும் தெரியும்.ஆனால் சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்திற் வராமல் ரயில் புறப்படும் நேரத்தில் வருவார்கள். அப்படி வருபவரகள் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏறுவார்கள்.இப்படி ஏறும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்பது அடிக்கடி நடக்கிறது.

An RPF cop saved a woman who fell while trying to board a running train at Chennai Central Railway Station

ஒரு ஐந்து நிமிடம் முன்பு வரும் வகையில் பயணத்தை மேற்கொள்ள பலர் தயாராக இல்லை. அந்த ஐந்து நிமிடத்திற்காக கொடுக்கும் விலை மிகஅதிகமாக உள்ளது. சில நேரங்களில் உயிரையே கூட விலையாக கொடுக்கிறார்கள். அஜாக்கிரதை, அலட்சியம், கவனக்குறை என எப்படி பெயர்களில் வேண்டுமானாலும் அழைக்கலாம். அதனால் ஏற்படும் இழப்புகள் வாழ்நாளில் ஈடுகட்ட முடியாதது.

அதேநேரம் இதுபோல் அவசர அவசரமாக வரும் பயணிகளை சரியான நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன. ரயில் புறப்பட்டு சென்ற பின் வரும் பயணிகள் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்துவிடுவார்கள்.

அப்போது கன நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றுவார்கள். இந்த வீடியாக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு சம்பவம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இளம் பெண் ஒருவர் ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதிமாக தவறி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் தவறி விழுந்தார். இதனை கண்ட அருகிலிருந்த ஆர்.பி.எப் வீரர் அவரை காப்பாற்றினார்.

ரயிலில் சிக்கி சிறு காயத்துடன் மீட்கப்பட்ட அந்த இளம் பெண்ணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரியான நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர் துரிதமாக செயல்பட்டதால் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இரண்டு பேரை காப்பாற்றி உள்ளார். அவரை ரயில்வே அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

மக்களே, ரயிலில் பயணம் என்றால் குறைந்தது 20 நிமிடத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு வந்துவிடுங்கள். அப்போது தான் ரயில் நிலையத்தில் எந்த பிளாட்பார்ம் என்பது உங்களால் அறிய முடியும். ரயிலில் எந்த கோச்சில் ஏற வேண்டும் என்பதையும் பொறுமையாக பார்த்து அறிந்து ஏற முடியும். இல்லாவிட்டால் அவதி அவதியாக சென்று விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+