ரூ.2,500 ஊதிய உயர்வு, மே மாதமும் சம்பளம்.. பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு!
சென்னை: தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 19ஆவது நாளாக எழும்பூர் இர்வின் சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு தயாராக இருந்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

பின்னர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து போராடியவர்கள் தரப்பில், எங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு இன்னும் எத்தனை நாட்களானாலும் தொடர்ந்து போராடுவோம். அரசு ஊழியர்களை அலைக்கழிப்பது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. எஸ்எஸ்ஏ திட்டத்தில் ரூ.3,548 கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டி இருக்கிறது. அதனை மத்திய அரசு விடுவிக்காமல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இருந்தாலும், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகளுக்கு உறுதுணையாக அரசு இந்த செலவினங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்களின் போராட்டம் எனக்கு கனத்த இதயத்தை தருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலினிடமும் கூறினேன். பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி இருக்க வேண்டும்.
அதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத சூழலில், இனி மே மாதத்திலும் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களும் சில கருத்துக்களை கூறியுள்ளனர். அதேபோல் பணியின் போது இறந்த 20 இடைநிலை ஆசிரியர்கள் இறப்புக்கும் ஏதாவது நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் நானும் கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications