“ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டது.. முடிவெடுக்கும் நிலையில் இல்லை”.. சிவில் நீதிமன்றத்தில் அன்புமணி மனு
சென்னை: ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டது, அவர் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக சின்னம், கட்சி பெயரை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாமகவின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. பாமக கட்சியில் உரிமை கோரி வழக்கு தொடர நிறுவனருக்கு உரிமை இல்லை. தன்னை தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்து கொண்டு விதிகளை திருத்தியதை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
வயது, மருத்துவ காரணங்களால் ராமதாஸ் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை; ராமதாஸின் இந்த நிலையை பயன்படுத்தி சிலர் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள் ராமதாஸுக்கு 87 வயது ஆகிவிட்டது, சில நபர்கள் பாமகவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்
அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு மார்ச் 11ஆம் தேதிக்குள் ராமதாஸ் பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications