அன்புமணியின் 'ஒரே' வார்த்தை.. டோட்டல் எதிர்க்கட்சிகளும் 'க்ளோஸ்' - மனசையே கரைச்சிட்டார்!
சென்னை: சைதை துரைசாமிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ், சென்டிமெண்ட்டாக பல விஷயங்களை டச் செய்து அட போட வைத்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் நடைபெற உள்ள நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கும் வகையில், அதனை முறியடித்துக் காட்டுவோம் என்று அதிமுக கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அரிய அரசியல்வாதி
அந்த வகையில், இன்று சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பிரசாரம் செய்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து பேசினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அன்புமணி, "மூன்று தலைமுறைகளாக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் சைதை துரைசாமி. என்னைப்பொறுத்த வரை அவர் ஒரு அரிய அரசியல்வாதி. ஒரு சமூக சேவகர். அவரை நான் அரசியல்வாதியாக பார்ப்பதை விட, ஒரு சமூக சேவகராக பார்க்கிறேன்.

முப்பதாயிரம் பேர்
ஒரு நபர், இரண்டு நபர் கிடையாது. இதுவரை சுமார் முப்பதாயிரம் பேரை படிக்க வைத்து, கல்வியைக் கொடுத்துள்ளார். இவரால் கல்வி பெற்றவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கின்றனர். இது சாதாரண சேவை கிடையாது.

சாதாரணமாக கேட்கிறார்
இந்த காலத்தில் ஒருத்தரை படிக்க வைத்து கொண்டு வருவது என்பதே மிகப்பெரிய காரியம். 30,000 பேரை எந்த ஜாதி, மதம், இனம் என்று எதுவும் பார்க்காமல் ஏழை மக்களை படிக்க வைத்து, பயிற்சி கொடுத்து உலகெங்கிலும் பல உயர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொடுத்தவர். இன்று இங்கு சாதாரணமாக நின்று கொண்டு 'எனக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள்' என்று மிக எளிமையாக கேட்கிறார். அவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றிப்பெற வைக்க வேண்டியது நமது கடமை" என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கடும் சவால்
சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில், தி.மு.க சார்பில் வேட்பாளராக மா.சுப்பிரமணியன், அ.தி.மு.க-வில் சைதை துரைசாமி, மக்கள் நீதி மய்யத்தில் சினேகா மோகன்தாஸ் ஆகியோர் களம் காண்கின்றனர். இங்கு, திமுக vs அதிமுக என்பதே பிரதான மோதலாக உள்ளது. இங்கு சிட்டிங் எம்.எல்.ஏவாக திமுகவின் மா.சுப்பிரமணியன் இருந்தாலும், இம்முறை இங்கு சைதை துரைசாமி கடும் சவாலாக இருப்பார் என்கிறது கள நிலவரம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications