முப்படைகள் சந்திப்பு கூட்டம்... கட்சியை பலப்படுத்த களமிறங்கிய அன்புமணி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள முப்படைகளோடு அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் இன்று இந்த சந்திப்பை தொடங்கிய அன்புமணி, இனி வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகிய மூன்று படைகள் தான் பாமகவில் புதிதாக உருவாக்கப்பட்ட படைகள் ஆகும்.

அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சிக்கென குறிப்பிட்ட வாக்குவங்கியை உருவாக்கும் நோக்கில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை பட்டை தீட்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறக்க முடிவு செய்திருக்கிறது பாமக தலைமை.

அன்புமணி பேச்சு
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களில் முப்படைகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய அன்புமணி, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். அன்புமணியின் பாசிட்டிவான பேச்சைக் கேட்டு தம்பிகள், தங்கைகள் படைகளில் இணைந்துள்ள இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகம் ஆகினர்.

வட தமிழகம்
வடதமிழகத்தில் 75 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்து அங்கு மட்டும் இந்தப் படைகளை முழு வீச்சில் செயல்பட திட்டமிட்டுள்ளது பாமக தலைமை. இந்தப் படைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

சமூக வலைதளம்
முப்படைகளில் வன்னியர் இன இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமல்லாமல், பாமகவின் மது ஒழிப்பு உள்ளிட்ட சித்தாந்தங்கள் மீது பற்று கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications