ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனம் இடமாறுகிறதா? ஆந்திராவின் ஸ்ரீசிட்டி அதிகாரிகள் பேச்சுவார்த்தை?
சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஒரு மாதத்தை கடந்து இரண்டாவது மாதம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இடமாற்றம் தொடர்பான பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. பல்வேறு மாநிலங்கள் இடமாற்றம் செய்வது குறித்து சாம்சங்கை அணுகுவதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து 75 கிமீ தூரமுள்ள ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்கு இடமாற்றம் செய்வது குறித்து சாம்சங்கை ஆந்திர அதிகாரிகள் அணுகியுள்ளனர்.
ஆந்திராவின் சிறப்புப் பொருளாதார மண்டலமான ஸ்ரீ சிட்டிக்கு சாம்சங் நிறுவனத்தை கொண்டு செல்ல, ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை ஒரு வாய்ப்பாக ஆந்திர அதிகாரிகள் பார்க்கிறார்களாம். சென்னையில் இருந்து வெறும் 75-கிமீ தொலைவில் உள் ஸ்ரீசிட்டியில் தான் சென்னைமெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் அமைய வேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள் அங்கு தான் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி தொழில் நுட்ப நகர அதிகாரிகள் சாம்சங் நிறுவனத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ சிட்டியை சேர்ந்த அதிகாரிகள் கூறும் போது, ஆலையை இடமாற்றம் செய்வது குறித்து முறைசாரா சுற்று பேச்சுவார்த்தைக்காக சாம்சங் நிர்வாகிகளை அணுகியுள்ளோம் என்றார்கள். எனினும், சாம்சங் அதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
இந்த ஆண்டு மே மாதம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது முதலே ஸ்ரீசிட்டியில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள தொழில் நகரத்தில் 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
இதனிடையே ஸ்ரீ சிட்டி அதிகாரிகள் சம்சங்கை அணுகினார்களா இல்லை என்பது குறித்த கேள்விக்கு , சாம்சங் செய்தித் தொடர்பாளர் அதை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.. அதேநேரம் மாநிலத்தைவிட்டு சாம்சங் வெளியேறுதவற்கு வாய்ப்பே இல்லை என்றே சொல்கிறார்கள். தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் ஆலையை வேறு இடத்திற்கு மாறப்போவதாக வெளியான செய்தியை திட்டவட்டமாக மறுத்தார். சாம்சங் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையான சிஐடியு தொழிற்சங்கத்தை பதிவு செய்வது என்பது, நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே சாத்தியம் என்றும், அதில் அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்றும், ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தினார்.
ஸ்ரீ சிட்டியை பொறுத்தவரை சென்னையிலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் செல்ல சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கிருஷ்ணாப்பட்டினம் மற்றும் வரவிருக்கும் துர்காராஜுபட்டினம் உட்பட அதன் 100 கிமீ சுற்றளவில் உள்ள ஐந்து துறைமுகங்களை அடையும் வகையில ஸ்ரீசிட்டி தொழில் நகரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications