"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சக முன்னாள் அமைச்சரான மனோ தங்கராஜை நோக்கி வீசியுள்ள கடுமையான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக தென் மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
"அமைச்சர் மனோ தங்கராஜ் மனக் குழப்பத்தில் இருக்கிறார்" என்று அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகச் சாடியுள்ளதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜின் செயல்பாடுகள், பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணனிடம், மனோ தங்கராஜின் சமீபத்திய விமர்சனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சற்றும் யோசிக்காமல் மிகக் கடுமையான வார்த்தைகளால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரை திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ ஆகியோர் சமீபத்தில் சந்தித்து, 'கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என்று கடிதம் கொடுத்தனர். இதனை விமர்சித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், வீடியோ வெளியிட்டார்.
மனோ தங்கராஜ் கடுமையான விமர்சனம் வைத்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், நான், நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது 400 லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. அங்குள்ள டிரைவரிடம், எதற்கு இவ்வளவு லாரிகள் நிற்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முறைப்படி எல்லா ஆவணங்கள் இருந்தும் லாரிகளை மடக்கி வைத்துள்ளார்கள் என்று தெரிவித்தனர்.
எனவே அவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக உள்ளூர் எம்.எல்.ஏ. ஆஸ்டினை அழைத்துச்சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து, இந்த தொழிலை சரியாக செய்கிறவர்களுக்கு எந்த அரசாங்கமும் தடை விதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.
அப்போது இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, கேரளாவும் இந்தியாவில்தானே இருக்கிறது. அது என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. கனிம வளங்களை கொண்டு செல்லவில்லை என்றால் நாகர்கோவிலில் இருப்பவர்கள் எப்படி கட்டிடங்கள் கட்டுவார்கள். இதற்குதான் குரல் கொடுத்தோம். சகோதரர் மனோதங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக உட்கட்சிப் பூசல்களை சீனியர்கள் பொதுவெளியில் மழுப்பலாகப் பேசி கடந்துவிடுவார்கள். ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் சற்றும் தயங்காமல் மனோ தங்கராஜை விமர்சித்துள்ள விதம், திமுகவிற்குள் தென் மாவட்ட அரசியல் எந்த அளவுக்குப் புகைந்துகொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications