சென்னைக்கு நாளை விடுமுறை.. தேர்வுகளை ஒத்திவைத்த அண்ணா மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
சென்னை: கனமழை எதிரொலியாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் நடக்கும் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்லைக்கழகம் அறுவித்துள்ளது. அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற உள்ள தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதேபோல் நாளையும் கனமழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாளை (புதன்கிழமை) சென்னை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இயங்காது. தற்போது பல்வேறு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த விடுமுறையால் செமஸ்டர் தேர்வுகள் நடக்குமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் சார்பில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் நாளை நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்லைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தின் (Madras University) உறுப்பு கல்லூரிகளிலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் ஒத்திவைக்கப்படும் தேர்வுக்கான தேதியை பல்லைக்கழகங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications