அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் அதிரடி கைது.. மேலும் 4 மாணவிகள் புகார்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஞானவேல் பாபுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநெல்வேலியில் பதுங்கியிருந்தபோது அவர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது அந்த பேராசிரியர் மீது மேலும் 4 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 2024ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மொத்த தமிழகத்தையும் இந்த சம்பவம் உலுக்கிப்போட்டது. ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது பல்கலைக்கழக மாணவிக்கு, பேராசிரியர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேராசிரியர் மீது மாணவி புகார்
இந்த புகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், ''அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு தனக்கு நேரடியாகவும், செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் பாலியல் தொல்லை அளிக்கிறார். வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறார்'' என தெரிவித்து இருந்தார்.
திருநெல்வேலியில் கைது
இந்த புகாரை தொடர்ந்து சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஞானவேல் பாபு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஞானவேல் பாபு தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருநெல்வேலியில் வைத்து அவரை இன்று கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்கின்றனர். மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதால் தற்போது அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 4 மாணவிகள் புகார்
இதற்கிடையே தான் கைதான பேராசிரியர் ஞானவேல் பாபு இன்னும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 4 மாணவிகள் இன்று போலீசில் புகார் வழங்கி உள்ளனர். அந்த மாணவிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது.
சஸ்பெண்ட்
பேராசிரியர் ஞானவேல் பாபு இன்னும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதனால் சென்னையில் வைத்து ஞானவேல் பாபுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தான் ஞானவேல் பாபுவை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. பாடம் நடத்த வேண்டிய பேராசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?













Click it and Unblock the Notifications