Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா பல்கலை. மாணவி வழக்கை திசைதிருப்பும் காவல்துறை.. சந்தேகம் உறுதியாகியுள்ளது - அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகளின் அடையாளங்கள், விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியில் கசிந்த சம்பவம் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாகக் கூறி அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

anna university annamalai

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் இருந்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைபேசியில் பேசியதாக மாணவி கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால், அதற்கு நேர்மாறாக குற்றவாளி தனது மொபைல் போனை ஏரோப்ளேன் மோடில் வைத்திருந்ததாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்குள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+