தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்த கே. அண்ணாமலை தனது பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துவிட்டு புதிய அமைப்பு தொடங்கி உள்ளார். பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட சில மணி நேரங்களுக்குள், அண்ணாமலை தனது புதிய அரசியல் பயணத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை முன்னிறுத்தும் விதமாக, தனியாக புதிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, "We The Leaders" (wetheleader.org) என்ற புதிய டிஜிட்டல் தளத்தையும், அரசியல் இயக்கத்தையும் அவர் முறைப்படி அறிவித்தார்.

Annamalai

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தமிழக பா.ஜ.கவில் இதுவரை கண்டிராத அளவிலான மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.கவின் வாக்கு வங்கியிலும் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் கடுமையான பிளவு உருவாகியுள்ளது. இயக்கம் தொடங்கிய வெறும் 10 மணி நேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகப் பதிவு செய்தனர். தற்போது 24 மணி நேரத்தைக் கடப்பதற்குள் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டி 17 லட்சத்தை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது.

இது தமிழக அரசியல் வரலாற்றில் அரிதான ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் ஆய்வாளர்களின் முதற்கட்ட கணிப்புகளின்படி, தமிழகத்தில் பா.ஜ.கவை ஆதரித்த தீவிர ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது பா.ஜ.கவைப் புறக்கணித்துவிட்டு அண்ணாமலையின் புதிய இயக்கத்தின் பின்னால் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர். இந்தப் பெரும் இடமாற்றம் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பா.ஜ.க கூடாரம் காலி ஆகிறதா?

அண்ணாமலையின் வெளியேற்றத்தால் தமிழக பா.ஜ.க தட்டையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. டெல்லி தலைமை திராவிடக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அண்ணாமலைக்கு இருந்த நீண்டகால முரண்பாடே இந்த விலகலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. தனது வீடியோ பதிவில் அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்: "நான் பா.ஜ.கவில் இருந்தாலும் என் தமிழ் அடையாளத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு சுயசார்பான, எளிய மக்களுக்கான அரசியல் தேவை."
அண்ணாமலையின் முடிவை ஆதரித்து, கட்சியின் முக்கிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து வருகின்றனர்.

பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், பெரம்பலூர் மாவட்ட பொதுச் செயலாளர் உமா ஹைமாவதி செல்வராஜ், மாநில இளைஞரணி சட்டப் பிரிவு அமைப்பாளர் அபிலாஷ் கோபிநாத் உள்ளிட்டோர் முக்கியப் பொறுப்புகளைத் துறந்து அண்ணாமலையுடன் இணைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களும் சமூக ஊடகப் பிரிவினரும் பா.ஜ.கவிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக அண்ணாமலையின் ஆக்ரோஷமான பிரச்சாரங்கள் மற்றும் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மூலம் தான் பா.ஜ.க தமிழகத்தில் கவனத்தைப் பெற்றது. இப்போது அந்த முதன்மை முகமே கட்சியை விட்டு வெளியேறியிருப்பதால், தமிழக பா.ஜ.க கட்டமைப்பு முற்றிலும் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்: "கட்சித் தலைமை இழப்பில்லை எனக் கூறினாலும், கள யதார்த்தம் வேறு. அண்ணாமலை என்ற ஒற்றை நபரை நம்பி வந்த நடுத்தர வர்க்கத்தினரும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் பார்த்த இளைஞர்களும் இப்போது அவரது புதிய இயக்கத்திற்கு மாறிவிட்டனர். இதனால் தமிழகத்தில் பா.ஜ.கவின் அரசியல் எதிர்காலம் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது."
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி அரசியலிலும் இந்த அதிரடிப் பாய்ச்சல் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையின் புதிய இயக்கம் தமிழ் அடையாளத்துடன் கூடிய சுயசார்பு அரசியலை முன்னெடுக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+