அண்ணாமலை போட்ட டீம்.. நயினார் தலைமையில் சசிகலா புஷ்பாவும் இருக்காரே! வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யனுமாம்
சென்னை: கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் கடந்த வாரம் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவானது. ஒரே நாளில் 96 சென்டி மீட்டர் அளவில் பெரு மழை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக கொட்டித் தீர்த்தது. 4 மாவட்டங்களில் இருக்கும் அருவிகள், நீர் நிலைகளில் தண்ணீர் வழிந்தோடியது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குடியிருப்புகளுக்கு உள்ளேயே தண்ணீர் புகுந்தது. அதி கனமழை காரணமாகவும் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டதாலும் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தமிழ்நாடு அரசு மீட்புப் படை, தீயணைப்பு துறை, காவல் துறை, தன்னார்வலர்கள் என பலர் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது, "திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பின் தீவிரத்தை முழுமையாக ஆய்வு செய்து மாநிலத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவானது உடனடியாக ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மாநில அளவிலான குழு:
1. மருத்துவர் சசிகலா புஷ்பா - மாநில துணை தலைவர்
2. பொன் பாலகணபதி - மாநில பொது செயலாளர்
3. K. நீலமுரளி யாதவ் - மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி தெற்கு
4. A.N. ராஜகண்ணன் - மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி வடக்கு
5. R. சித்ராங்கதன் - மாவட்டத் தலைவர். தூத்துக்குடி தெற்கு
6. வெங்கடேசன் சென்னகேசவன் - மாவட்டத் தலைவர், தூத்துக்குடி வடக்கு
7. S.P.தமிழ்ச் செல்வன் - மாவட்டத் தலைவர், திருநெல்வேலி தெற்கு
8. A.தயாசங்கர் - மாவட்டத் தலைவர், திருநெல்வேலி வடக்கு" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications