இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்?
சென்னை: பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, என் மண் என் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுக்க நடைபயணம் மேற்கொண்டார். அதற்கு முன்பாக அண்ணாமலையின் பாதுகாப்பு கருதி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது. பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகிய பிறகும் அவருக்கு தொடர்ந்து இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்?
இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து விலகி தனி அரசியல் கட்சி தொடங்கியுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கும் அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இசட், ஒய் என பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது.
உள்துறை அமைச்சகம் அளிக்கும் பரிந்துரையின்படி இந்த பாதுகாப்பு வழங்கப்படும். இசட் பிரிவு பாதுகாப்பின்படி, மொத்தம் 22 பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில் 4 முதல் 6 கமாண்டோ வீரர்களும் அடங்கும். உள்ளூர் போலீசாருடன் இணைந்து இந்த கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். புல்லெட் புரூப் வாகனம், பாதுகாப்பு கன்வாய் ஆகியவை இசட் பிரிவு பாதுகாப்பில் வழங்கப்படும்.
15 லட்சத்தை நெருங்கியது
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலில் என்ட்ரி கொடுத்தவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு அவரது சரவெடி பேச்சுகள், பாஜகவை தமிழகத்தில் அதிகம் கவனம் ஈர்க்க வைத்த கட்சிகளில் ஒன்றாக மாற்றியது. சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு மாதம் அமைதியாக இருந்த அண்ணாமலை தற்போது புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். நாமேதான் தலைவர்கள் என்ற பெயரில் அண்ணாமலை புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கி, அதில் சேருவதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டு இருக்கிறார்.
அண்ணாமலையின் இயக்கத்தில் பாஜகவினர் பலரும் இணைய ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. தற்போது வரை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கரு. நாகராஜன் உள்ளிட்டோரும் பாஜகவில் இருந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
-
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!














Click it and Unblock the Notifications