இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, என் மண் என் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுக்க நடைபயணம் மேற்கொண்டார். அதற்கு முன்பாக அண்ணாமலையின் பாதுகாப்பு கருதி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது. பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகிய பிறகும் அவருக்கு தொடர்ந்து இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

Annamalai Writes to Centre Seeking Withdrawal of Z Category Security After Launching New Political Movement

உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்?

இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்து விலகி தனி அரசியல் கட்சி தொடங்கியுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கும் அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இசட், ஒய் என பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது.

உள்துறை அமைச்சகம் அளிக்கும் பரிந்துரையின்படி இந்த பாதுகாப்பு வழங்கப்படும். இசட் பிரிவு பாதுகாப்பின்படி, மொத்தம் 22 பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில் 4 முதல் 6 கமாண்டோ வீரர்களும் அடங்கும். உள்ளூர் போலீசாருடன் இணைந்து இந்த கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். புல்லெட் புரூப் வாகனம், பாதுகாப்பு கன்வாய் ஆகியவை இசட் பிரிவு பாதுகாப்பில் வழங்கப்படும்.

15 லட்சத்தை நெருங்கியது

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலில் என்ட்ரி கொடுத்தவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு அவரது சரவெடி பேச்சுகள், பாஜகவை தமிழகத்தில் அதிகம் கவனம் ஈர்க்க வைத்த கட்சிகளில் ஒன்றாக மாற்றியது. சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு மாதம் அமைதியாக இருந்த அண்ணாமலை தற்போது புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். நாமேதான் தலைவர்கள் என்ற பெயரில் அண்ணாமலை புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கி, அதில் சேருவதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டு இருக்கிறார்.

அண்ணாமலையின் இயக்கத்தில் பாஜகவினர் பலரும் இணைய ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. தற்போது வரை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கரு. நாகராஜன் உள்ளிட்டோரும் பாஜகவில் இருந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+