அண்ணாநகரில் கஞ்சா போதையில் இளைஞர் அலப்பறை! போலீஸுக்கு நைட்டியில் வாய்சவடால்! கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை அண்ணாநகரில் நைட்டியுடன் வந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கங்கை அமரன் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர் தன்னை பெரிய ரவுடி என காட்டிக் கொள்ள நைட்டி அமரன் பாய் என்ற பெயரில் மிரட்டி மாமுல் வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
கஞ்சா போதையில் பேஸ்புக் லைவில் ஒரு இளைஞர் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவல் துறை ஆணையர், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் மீது அவதூறாக பேசினார். மேலும் அந்த லைவ் வீடியோவிலேயே கஞ்சா பற்ற வைத்து புகைத்து அண்ணா நகரில் தன்னை யாராவது நெருங்கினால் வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்றும் சினிமா வில்லன் ரேஞ்சுக்கு பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் இந்த வீடியோவை பதிவிட்ட நபரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீஸார், அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போதுதான் அந்த செல்போன் சிக்னல் அண்ணாநகரில் உள்ள லோட்டஸ் காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதை காட்டியது.
உடனே அண்ணா நகர் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து அந்த நபரின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது அவர் கதவை திறக்காமல் திடீரென பாக்ஸிங் கிளவுஸ் போட்டுக் கொண்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்தார்.
பிறகு அந்த ஜன்னல் மீது ஏறிக் கொண்டு என்னை பிடித்து விட முடியுமா என கேட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். மீண்டும் அந்த நபரை பிடிக்க காவல் துறையினர் முற்பட்ட போது திடீரென வீட்டுக்குள் சென்ற அவர், நைட்டி அணிந்து கொண்டு ஜன்னல் வழியாக வந்து மீண்டும் மிரட்டியுள்ளார்.
ஹவுஸ் ஓனர் எங்கே என போலீஸார் அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது கூட ஹவுஸ் ஓனரை அந்த நபர் ஆபாசமாக பேசினார். பிறகு தீயணைப்பு துறையினர் ஏணி மூலம் ஏறி அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது தப்ப நினைத்த அந்த நபர் திடீர் ட்விஸ்ட்டாக தவறி கீழே விழுந்தார்.
அவருடைய கையில் எலும்பு உடைந்துவிட்டது. அத்தனை உதார் விட்டுவிட்டு வலியால் துடித்த அவரை போலீஸார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவருடைய வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது ஏதோ மர்ம பொருள் கிடைத்துள்ளது. அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் நைட்டியில் வந்து மிரட்டல் விடுத்த அந்த நபர் அண்ணா நகரை சேர்ந்த கங்கை அமரன் என்பதும், இவர் ஓட்டேரியை சேர்ந்த ரவுடி ஒருவரிடம் உதவியாளராக இருந்ததும் தெரியவந்தது. இதை வைத்து பலரை நைட்டி அமரன் பாய் என மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications