"இது என்ன சார்!" தமிழ் படிக்க தெரியாமல் விழித்த மற்றொரு நாம் தமிழர் வேட்பாளர்! எங்கு தெரியுமா
சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளூரில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் என்பவர் வேட்புமனு தாக்கலின் போது தமிழ் படிக்க முடியாமல் திணறிய வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் புதுச்சேரி சேர்த்து 40 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்குகிறது.

நாம் தமிழர்: நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் சின்னதில் நாம் தமிழருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் சீமான் தனது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
அதன்படி திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஸ் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். அவர் ME (Aero), LLB படித்துள்ளார். இவர் முகப்பேரில் உள்ள பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார். அப்போது தான் அவர் தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ் தெரியாமல்: அதாவது வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். ஆனால், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஸ் சுந்தர் தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியுள்ளார். வேட்புமனுத் தாக்கலின்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தைப் படிக்கத் தெரியாமல் ஜெகதீஸ் சுந்தர் திக்கி நின்றார். முதலில் ஓரிரு வரிகளை அவர் வாசித்த நிலையில், அடுத்த என்னது எனத் தெரியாமல் திணறினார்.
அவர் தொடர்வார் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் சில நொடிகளில் காத்திருந்திருந்தார். இருப்பினும், ஜெகதீஸ் சுந்தரால் தமிழ் படிக்க முடியவில்லை. இதையடுத்து தமிழில் இருந்த உறுதிமொழியை ஒவ்வொரு வரியாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, அதனைத் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார் ஜெகதீஸ் சுந்தர். முன்னதாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரும் இதேபோல தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்: திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் கெகதீஸ் சுந்தர் போட்டியிடும் நிலையில், இந்த முறை அங்கே திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் களமிறங்குகிறார். அதேபோல அதிமுக சார்பில் முன்னாள் எழும்பூர் எம்எல்ஏ நல்லதம்பி போட்டியிடும் நிலையில், பாஜக சார்பில் பொன் வி பாலகணபதி போட்டியிடுகிறார்.
அங்கே கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் சார்பில் கே ஜெயக்குமாரும் அதிமுக- பாக கூட்டணி சார்பில் பி வேணுகோபாலும் போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யம் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் வெற்றிசெல்வி ஆகியோரும் களத்தில் இருந்தனர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 7.67 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 3.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். நாம் தமிழர் வேட்பாளர் 65,416 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையே பிடித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications