குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- சென்னை, மதுரை, சேலத்தில் இன்றும் போராட்டம்
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் நாள்தோறும் போராட்டங்கள் தொடருகின்றன.

சென்னையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரமாண்டமான பேரணியை நேற்று நடத்தின. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை தாம்பரத்தில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று திரண்டு இன்று போராட்டம் நடத்தினர். மதுரையில் ஆதித் தமிழர் பேரவையினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அவர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதேபோல் சேலம், சிதம்பரம், திண்டிவனத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
செங்கல்பட்டில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications