எங்கள் ரத்தம்.. எங்கள் ரத்தம்.. ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்.. திமுக போராட்டத்தில் ஆவேச கோஷங்கள்
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக, தொண்டர்கள் ஆண்கள் பெண்கள் பேதமின்றி பங்கேற்றனர்.

ஸ்டாலின் உரைக்கு பிறகு கண்டன முழக்கங்களை எழுப்பினார். அதைப் பின்பற்றி, தொண்டர்களும், முழக்கங்கள் எழுப்பினர். அந்த ஆவேசமான முழக்கங்கள் இவைதான்:
மத்திய அரசே.. மத்திய அரசே.. பிரிக்காதே பிரிக்காதே மதங்களால் மக்களை பிரிக்காதே.. மத்திய அரசே, பாஜக அரசே.. குடியுரிமை சட்டமா, குழிபறிக்கும் சட்டமா, இந்திய அரசே இந்திய அரசே, இந்தியர்களை பிரிக்காதே.. இந்திய அரசே, இந்திய அரசே இந்தியர்களை பிரிக்காதே.
மத்திய அரசே, மத்திய அரசே இது குடியுரிமை சட்டமா.. குழிபறிக்கும் சட்டமா.. எடப்பாடி அரசே தலையாட்டாதே, தலையாட்டாதே, மத்திய அரசுக்கு தலையாட்டாதே..
எங்கள் ரத்தம்.., எங்கள் ரத்தம்.. ஈழத்தமிழர்கள் எங்கள் ரத்தம். எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம், ஈழத்தமிழர் எங்கள் ரத்தம்.., காப்போம் காப்போம் ஈழத்தமிழர்களை காப்போம்.. காப்போம், காப்போம் சிறுபான்மையினரை காப்பாற்றுவோம்..
அதிமுக கூட்டணியா, மக்கள் விரோத கூட்டணியா.., அதிமுக கூட்டணியா சிறுபான்மையினர் விரோத கூட்டணியா.., கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் தமிழர் விரோத தமிழக அரசை கண்டிக்கிறோம்.. இஸ்லாமிய விரோத தமிழக அரசை கண்டிக்கிறோம்.. இஸ்லாமியரிடம் மன்னிப்பு கேள்.. வஞ்சிக்காதே வஞ்சிக்காதே ஈழத்தமிழரை வஞ்சிக்காதே.. இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே.. இவ்வாறு கோஷங்கள் முன் வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications