லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு... எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களின் நிறுவனங்களுக்கு மட்டுமே அளித்ததாக எஸ்.பி. வேலுமணி மீது புகார் எழுந்துள்ளது. எஸ்.பி வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கோவையில் முதல்வர் ஸ்டாலின் சூளுரைந்த அந்த நாள்.. என்ன சொன்னார் எஸ்பி வேலுமணி குறித்து...?

    தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் 35க்கும் மேற்பட்ட இடங்களிலும் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் மொத்தமாக 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.

    Anti-corruption officials raid Case registered against 17 persons including SP Velumani

    அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதும் அவரது சகோதரர் அன்பரசன், உறவினர் சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுகவின் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    Anti-corruption officials raid Case registered against 17 persons including SP Velumani

    கேசிபி என்ஜினியர் பிரைவேட் லிமிடெட், கேசிபி இன்ப்ரா லிமிடெட், ஸ்ரீமகாகணபதி ஜூவல்லர்ஸ், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ், எசிஇ டெக் மெசினரி, ஆலாம் கோல்ட் அன் டயமன்ட்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Anti-corruption officials raid Case registered against 17 persons including SP Velumani

    எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக எழுந்த தகவலை அடுத்து கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் இல்லத்தில் அதிமுக தொண்டர்களும் உறவினர்களும் திரண்டனர். தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+