அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குட்நியூஸ் வருது.. கரண்ட் பில் குறையுதா? எவ்ளோன்னு பாருங்க.. சூப்பர்
சென்னை: தாறுமாறாக உயர்த்தப்பட்ட கரண்ட் பில்லில் மாற்றம் வர உள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, முக்கிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், லிப்ட், மோட்டார் பம்ப் போன்றவற்றை உள்ளடக்கிய, "காமன் சர்வீஸ்" எனப்படும் பொது சேவை மின் இணைப்பு இருந்தது... இதற்கு, வீட்டு பிரிவில் மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

அதாவது, பொதுவான பயன்பாட்டிற்கு பலர் தனி மின் மீட்டரை பயன்படுத்தி வந்த நிலையில், வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் மோட்டார், பொதுவான மின் விளக்கிற்கு தனியாக கட்டணம் வசூலிக்க தனி மீட்டர் பயன்படுத்தி வந்தனர்.. இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரை மானிய கட்டண சலுகையும் கிடைத்தன.
தொழிற்சாலைகள்: ஆனால், கடந்த, 2022 செப்டம்பரில் இந்த மின் கட்டணத்தை, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது.
அதன்படி, முதல்முறையாக, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு, மின் கட்டணம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, ஒரு யூனிட், 8 ரூபாயும், மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா, சமூக கூடம் ஆகியவற்றிற்கு பொருந்தும்.
குடியிருப்புவாசிகள்: சொந்த குடியிருப்புகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவான பயன்பாட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.. குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல என்ற ஆதங்கமும், அதிருப்தியும் குவிந்தன.. ஆனால் அதற்குள், கடந்த ஜூலையில் மறுபடியும் கரண்ட் பில் உயர்த்தப்பட்டுவிட்டது.
அதன்படி, மறுபடியும் பொது சேவை பிரிவுக்கான ஒரு யூனிட் கட்டணம், 8.15 ரூபாயாகவும், நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு, 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன. இதனால், குறைந்த வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த கட்டணத்தை குறைக்குமாறு, கோரிக்கை விடுத்தபடியே உள்ளனர்..
குறையும் கரண்ட் பில்: இந்த கோரிக்கையைதான் தமிழக மின்துறை பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. 10க்கும் குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பொது சேவை மின் கட்டணத்திற்கு பதில், வீட்டு பிரிவிலேயே மின் கட்டணத்தை நிர்ணயிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுதொடர்பாக, மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசித்து, விரைவில் அந்த அறிவிப்பினை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications