திரை மூடியே இருக்கும்.. சில நேரம் திறந்து விடுவாங்க.. மரமெல்லாம் தெரியும்.. குழப்பும் பஞ்சாபகேசன்!
அப்போலோ மருத்துவமனை ஊழியரிடம் விசாரணை நடைபெற்றது.
சென்னை: ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ தொடர்பாக திரும்பவும் குழப்பம் ஆரம்பிச்சாச்சு.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணையை தீவிரபடுத்தி வருகிறது. இதில் சசிகலா தரப்பு உட்பட ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் வரை எல்லாரையுமே விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக அப்பல்லோ மருத்துவமனையும் விசாரணை வளையத்துக்குள் உள்ளது. எனவே அம்மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்றும்கூட அப்போலோ மருத்துவமனை தொற்று நோய் தடுப்பு சிறப்பு டாக்டர் ராமகோபாலகிருஷ்ணன், தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள்.

வாக்குமூலம்
அப்போது டாக்டர் ராமகோபாலகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் "ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் தொற்று 15.11.2016 அன்று முழுமையாக சரியாகி விட்டது" என்றார். ஆனால், இதற்கு முன்பு அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதாவின் இறப்பு அறிக்கையை அளித்திருந்தது.

புது குழப்பம்
அதில், "நோய் தொற்றினால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா இறந்தார்" சொல்லப்பட்டிருந்தது. அப்படியானால் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று சாகும்வரை இருந்ததா? அல்லது முழுமையாக சரியாவிட்டதா என்ற புது குழப்பம் எழுந்துள்ளது.

ஸ்கிரீன் மூடி இருக்கும்
அதேபோல, மருத்துவமனை ஊழியர் பஞ்சாபிகேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஏனெனில் இவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த ஐசியு ரூமில்தான் டெக்னீஷியனாக வேலை பார்த்து உள்ளர். அவரை அழைத்து ஆணையம் தரப்பில் விசாரிக்கும்போது, "ஜெயலலிதா இருந்த ரூமின் ஜன்னல் கண்ணாடி எப்பவுமே ஸ்கிரீன் போட்டு மூடியே இருக்கும்" என்று சொன்னார். திரும்பவும் குறுக்கு விசாரணை செய்தால், "சில சமயங்களில் திறந்து விடப்படும், அப்போ வெளியில இருக்கிற மரங்கள் தெரியும்" என்று சொல்கிறார்.

குழப்பும் பஞ்சாபகேசன்
இப்படி மாறி மாறி குழப்புகிறார் பஞ்சாபகேசன். ஏற்கனவே ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று இருக்கும் வீடியோ பற்றி நிறைய குழப்பம் இருக்கிறது. இப்போவில் பஞ்சாபகேசனின் இந்த வாக்குமூலத்தினால் திரும்பவும் இந்த வீடியோ சம்பந்தமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications