விபத்தில் தூக்கி வீசப்பட்ட நபர்.. இதய துடிப்பை வைத்தே ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்.. சுவாரசியம்
சென்னை: சாலை விபத்தில் அடிபட்ட நபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆப்பிள் வாட்சின் புதிய மாடல்கள் பல நவீன வசதிகளோடு வரத்தொடங்கி உள்ளன. முக்கியமாக தனிப்பட்ட நபர்களின் உடல்நிலை, அவர்களின் பாதுகாப்பு இவரை கருத்தில் கொண்டு நிறைய வசதிகள் ஆப்பிள் வாட்ச்களில் கொண்டு வரப்பட்டு உள்ளன.
முக்கியமான ஆப்பிள் சீரிஸ் 4 வகை வாட்ச்களில் நமது இதய துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை மட்டுமின்றி நமக்கு விபத்து ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வசதிகளும் உள்ளன. அதாவது ஆப்பிள் வாட்ச் கட்டிய ஒருவருக்கு விபத்து ஏற்பட்டால் அதை அந்த வாட்ச் கண்டுபிடிக்கும் திறன் கொண்டு உள்ளது.

விழுவது
வேகமாக விழுவது, தரையில் வேகமாக மோதுவது, ஆப்பிள் வாட்ச் கட்டியவரின் திடீர் அடைவு, அவரின் இதய துடிப்பு இதை வைத்து ஆப்பிள் வாட்ச் விபத்தை கணிக்கும். சமயங்களில் நீங்கள் லேசாக தவறி விழுந்தால் கூட ஆப்பிள் வாட்ச் அதை விபத்து என கருதும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற சமயங்களில் வாட்ச் திரையில் நீங்கள் விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

விபத்து
ஒருவேளை உங்களுக்கு உண்மையில் விபத்து ஏற்பட்டால், உங்களால் வாட்ச் திரையில் பதில் அளிக்க முடியாது. உங்களிடம் இருந்து பதில் வராத சமயத்தில், உங்களுக்கு விபத்து ஏற்பட்டதை உறுதி செய்து கொண்டு ஆப்பிள் வாட்ச் அவசர நடவடிக்கைகளை எடுக்கும். அதாவது நீங்கள் அவசர அழைப்பிற்காக சேவ் செய்து இருக்கும் எண்ணுக்கு போன் செய்யும், அதோடு உங்களது லொகேஷனை அனுப்பும்.

ஆம்புலன்ஸ்
அதேபோல் அந்த நாட்டின் ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவிக்கும். உங்கள் இதய துடிப்பு மாறுபாட்டை வைத்து ஆப்பிள் இதை துல்லியமாக கணிக்கும். இந்த நிலையில்தான் சிங்கப்பூரில் முகமது பீட்ரி என்ற நபர் இந்த ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்டு உள்ளார். அவர் நேற்று பைக்கில் செல்லும் போது வேன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானார். இதில் வேகமாக தூக்கி வீசப்பட்டவர் மயங்கி விழுந்துள்ளார்.

இசிஜி மாற்றம்
இதனால் இவரின் உடலில் இதய துடிப்பு மாறி உள்ளது. இசிஜி மாற்றம் காரணமாக விபத்து நடந்ததை வாட்ச் கணித்துள்ளது. இதற்கான அலாரம் அடித்தும் அந்த நபர் பதில் எதுவும் அளிக்காத காரணத்தால் விபத்து நடந்ததை வாட்ச் உறுதி செய்துள்ளது. இதனால் உடனடியாக அவரின் உறவினருக்கு அந்த வாட்ச் தகவல் தெரிவித்தது. அதோடு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தது.

துரிதம்
ஆப்பிள் வாட்ச் துரிதமாக செயல்பட்ட காரணத்தால் உடனடியாக அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் முகமது பீட்ரி நேற்று காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது இவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார். ஆப்பிள் வாட்ச் ஒருவரின் உயிரை காப்பாற்றிய இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications