மாணவர்கள் கவனத்திற்கு.. இலவச கல்வி திட்டம்.. பட்டப்படிப்பை கட்டணமின்றி படிக்க வேண்டுமா? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2 வாரங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணைவதற்கான பணிகளை தொடங்கி இருக்கின்றனர். இந்த சூழலில் சென்னை பல்கலைக்கழகம் சார்பாக ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கான விண்ணங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 அரசுக் கல்லூரிகள், 24 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் 89 சுயநிதி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில்ம் இளநிலைப் படிப்புகளில் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டத்தின் கீழ் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கை நடைபெறுகிறது.

இலவச கல்வி திட்டம்
இதன் மூலமாக ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மேல், கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும். இந்த திட்டத்தில் சேர்வதற்கு 2024-25 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் அனைத்து பாடங்களிலும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம்
முக்கியமாக குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. இதனால் விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழை வருவாய் துணை வட்டாட்சியரிடம் பெற்று அனுப்ப வேண்டும். இந்த திட்டத்தில் பெற்றோரை இழந்த மற்றும் ஆதவற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே கட் ஆஃப் பார்க்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்படும்.
முதல் பட்டதாரி
அதேபோல் முதல் பட்டதாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்ந்து முக்கிய பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இலவச கல்வித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.unom.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்திற்கான கடைசி தேதியாக மே 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் இணைந்து 11 மற்றும் 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ, முதல் பட்டதாரி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் பெற்றோர் இல்லையென்றால் அவர்களின் இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications