ஆரணி தாசில்தார் டூ ஈரோடு விஏஓ.. மலைக்க வைத்த தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி, ஊழியர்களின் லஞ்சம்
சென்னை: லஞ்ச பணத்தில் அதிகாரிகள் சொத்து வாங்கி குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர்.. இதில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அடக்கம்.. பொதுவெளியிலேயே லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு சிக்கி கொள்ளும் பெண் அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.. இந்நிலையில், தமிழக அரசு துறையில் தாண்டவமாடும் லஞ்ச லாவண்யங்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி, அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாக லஞ்சம் வாங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. 2023-24ல் 155 பேர் லஞ்சம் வாங்கியிருந்த நிலையில், அந்த வழக்குகளை போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள்
2023-24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீதுதான் அதிகபட்சமாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
அதாவது, வருவாய்த்துறைக்கு அடுத்ததாக, மின்சார வாரியம் மீது 26 வழக்குகள், ஊரக வளர்ச்சித்துறை - 22, உள்ளாட்சி அமைப்புகள் - 21 வழக்குகள், சர்வே - 18, போலீஸ் - 10, பத்திரப்பதிவு - 8, சமூகநலத்துறை - 4 வணிகவரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை - 2, தொழிலாளர் நலத்துறை - 3 வழக்குகள் பதிவாகி, இவை தொடர்பான விசாரணையும் நடப்பதாக சில மாதங்களுக்கு முன்பு புள்ளிவிவரங்கள் வெளியாகியிருந்தன.
உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளம், நெடுஞ்சாலை, மின்சார வாரியம், காவல்துறை, தீயணைப்பு என பல்வேறு துறைகளில் லஞ்ச புகார்கள் கிளம்பினாலும், . இவைகள் அனைத்திலுமே டாப்பில் உள்ளது உள்ளன.. வருவாய்த்துறை பதிவுத்துறைதான் என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வருவாய்த்துறை டாப்
எனினும்கூட, தினமும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி கைதாகி கொண்டேயிருக்கிறார்கள்.. இந்நிலையில், தமிழகத்தில், கடந்த 2021 முதல் 2025 மார்ச் வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விவரப்படி, அரசுப்பணி செய்ய லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில், வருவாய் துறை, மின்வாரியம் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. .
அதில், "கடந்த 5 வருடங்களில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியலில் முதல் இடத்தில் வருவாய்த்துறை உள்ளது. சர்வே துறையில், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம், 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்துறை, பத்திரப்பதிவு
மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் முதல் போர்மேன் வரை, 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உள்ளாட்சிகளில் குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக, கிளார்க் முதல் கிராம பஞ்சாயத்து உதவியாளர் வரை, 32 பேர் கைதாகி உள்ளனர். 4வது இடத்தில் பத்திரப்பதிவு துறை உள்ளது.
நிலமதிப்பை குறைத்து பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக சார் - பதிவாளர், உதவியாளர் என, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், காவல் துறையில் 3 பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறையில் தலா 2 பேர் கைதாகி உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications