வேளச்சேரி பெருவெள்ளம்.. பொறுமையாக ஆராய்ச்சி செய்து.. சென்னை மாநகராட்சி மீது பாய்ந்த அறப்போர் இயக்கம்
சென்னை: வேளச்சேரி பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருக்க காரணமான ஒக்கியம் மடுகு பகுதியில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட குப்பைகளை சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் அகற்றி வருகிறது. இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேளச்சேரி பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருக்க முக்கிய காரணம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒக்கியம் மகுடு பகுதியில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகள் தான். இவை தான் தண்ணீர் கடலில் வேகமாக போய் கலப்பதை தடுக்கின்றன இந்த பகுதியில் அடிக்கடி சென்னை மாநகராட்சி சுத்தம் செய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் சுத்தம் செய்திருந்தது. இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வேகமாக வெளியறே முடியாமல் மீண்டும் ஒக்கியம் மகுடு பகுதியில் அடைப்புகள் ஏற்பட்டது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பணிகளை செய்து வருகிறது

இந்த பகுதியில் அடிக்கடி சென்னை மாநகராட்சி சுத்தம் செய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் சுத்தம் செய்திருந்தது. இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வேகமாக வெளியறே முடியாமல் மீண்டும் ஒக்கியம் மகுடு பகுதியில் அடைப்புகள் ஏற்பட்டது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பணிகளை செய்து வருகிறது,
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சியை குற்றம்சாட்டி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்லாவரம் பெரிய ஏரி கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கீழகட்டளை ஏரி கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. நாராயணபுரம் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 1 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரிகளில் இருந்து நிரம்பி வரும் மழை நீர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து வரும் மழை நீர் அனைத்தும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை வந்தடைகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கிட்டத்தட்ட கடல் மட்டத்தின் அளவிலேயே அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் ஒக்கியம் மடுகு வழியாக பக்கிங்காம் கால்வாயை அடைந்து அங்கிருந்து முட்டுக்காடு வழியாக கடலை சென்றடைகிறது.
இந்த ஒக்கியம் மடுகு பகுதியில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட செடிகளை டிசம்பர் 7ம் தேதி சென்னை மாநகராட்சி அகற்றிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக அக்டோபர் மாதத்தில் ஒரு முறை சுத்தம் செய்ததாகவும் சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது. அதாவது புயல் வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு சுத்தம் செய்திருக்கிறார்கள்.
வெள்ள நீர் வெளியேறுவதற்கு முக்கியமான இந்த பகுதியில் நிரந்தரமாக இயந்திரங்களை நிறுத்தி தினசரி தூர்வாரிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் வேளச்சேரி பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்ட பிறகு அங்கே ஏன் வெள்ள நீர் வடியவில்லை என்று பொறுமையாக ஆராய்ச்சி செய்து இந்த பகுதியை கண்டுபிடித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வந்துள்ளார்கள். இங்கே செடிகளை அகற்றிய பிறகு தான் வேளச்சேரி பகுதியில் வெள்ள நீர் முழுமையாக வடிய தொடங்கியது.
இந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்து இன்றல்ல 2016ம் வருடத்திலேயே அறப்போர் இயக்கம் அதிமுக அரசுக்கும் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கும் ஆய்வறிக்கை https://arappor.org/activities/waterbodies/ அனுப்பியுள்ளது. அதை எல்லாம் படித்து பார்த்து முன் எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட்டிருந்தால் புயல் முடிந்தவுடன் வெள்ளத்தை வெளியேற்றி இருக்கலாம். மக்கள் இத்தனை இன்னல்களுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள்.
வரலாறு காணாத மழை வந்தால் மக்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்று இனியும் சொல்லிக் கொண்டு இருக்காமல் எந்த மழை வந்தாலும் மக்களுக்கு எந்த இன்னல்களும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் பெரிய ஏரி கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கீழகட்டளை ஏரி கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. நாராயணபுரம் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 1 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரிகளில் இருந்து நிரம்பி வரும் மழை நீர் மற்றும்… https://t.co/AgE6QictPD
— Arappor Iyakkam (@Arappor) December 9, 2023
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications