கலைஞர் உரிமைத் தொகை திட்டம்: அடிக்க போகுது ஜாக்பாட்! மேலும் 2.30 லட்சம் பேரா? வெளியான தகவல்கள்
சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்கான நிபந்தனைகளை தளர்த்தி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகியோரை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 2.30 லட்சம் பேர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மாதம் தோறும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் திமுக, தனது தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த பிறகு, மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே,கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகிறார்கள். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் இருக்க கூடாது. ஒரு ஆண்டிற்கு வீ்ட்டு உபயோக மின்பயன்பாடு 3,600 யூனிட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.
கடந்த மாதத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, மகளிர் உரிமைத்தொகைக்கான நிபந்தனைகளை தளர்த்தி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள், புதிதாக திருமணமான பெண்கள் ஆகியோரை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாம்... இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வரும் 14 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டு வரும் 15 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனவே, இந்த திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது கவனிக்கத்தக்கது. அதாவது தற்போது உள்ள வருமான உச்ச வரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக நிர்ணயிக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறதாம்.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நடப்பு ஆண்டு ரூ.13 ஆயிரத்து 722 கோடி நிதியை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த நிதியின் கீழ் சுமார் 1 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரத்து 200 மகளிருக்கு நிதி அளிக்க முடியும். தற்போது அதைவிட குறைவான நிதியே வழங்கப்படுகிறது. வருமான உச்ச வரம்பை உயர்த்தினால் கூடுதல் பெண்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications