என்ன லேபிள் ஒட்டுறீங்களா..? ஜம்முனு சைக்கிள்ல போன போட்டோவை போட்டு திமுகவை கேள்வி கேட்ட ஜெயக்குமார்!
சென்னை : நான் அடிக்கல் நாட்டிய ராயபுரம் போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டும் வேலை செய்வதா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ராயபுரம் மண்டலம், போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் அமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்ததாகவும், அந்த திட்டத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிமுக ஆட்சியில் தொடங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர்கள் தொடங்கி வைத்த திட்டம்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் இரயில்வே சந்திக்கடவு 11A ல் ரூ13.40 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்ட பணியினை தொடங்கி வைத்தனர்.

ராயபுரம் சுரங்கப்பாதை
ராயபுரம் போஜராஜன் நகரில் அமையவுள்ள இந்த சுரங்கப் பாதை திட்ட பணியின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி. இந்த சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீ, அகலம் 6 மீட்டர். இதில் 37 மீட்டர் ரயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் அமைக்கப்படவுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இப்பணி முடிவுற்றுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.13.40 கோடி மதிப்பில் மூலதன மானிய நிதியின்கீழ் 170 மீட்டர் நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, திட்டப் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

நான் தொடங்கி வைத்த திட்டம்
இந்நிலையில், இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் தான் தொடங்கி வைத்ததாகவும், அந்த திட்டத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை தொடங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது திமுக அமைச்சர்கள் தொடங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

லேபிள் ஒட்டுவதா?
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் (2018) என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி பாதி முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அடிக்கல் நாட்டி லேபிள் ஒட்டும் வேலை செய்வதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications