மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தமிழக உயர்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தை பொறுத்த வரை 1.75 லட்சம் பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் இதுவரை 1,20,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 509 கல்லூரிகளில், 502 கல்லூரிகள் அண்ணா பல்கலை கழகத்திடம் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை ஒப்படைத்துள்ளன. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, ஒவ்வொரு கல்லூரிகளிலும் 65 சதவீதம் வரை அரசு இடஒதுக்கீட்டில் அளிக்கப்படுவதாக கூறினார்.
அரசு இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் இடங்களில் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும் என்றார். அரசு இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
அரசு வழங்கும் இடஒதுக்கீட்டு இடங்கள் ஏராளமாக காலியாக உள்ளதால், மாணவர்கள் முறையாக விண்ணப்பித்து பலன் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்த புகார்களை தெரிவிக்க, கூடுதல் இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். உயர்கல்வித்துறையின் எச்சரிக்கையையும் மீறி கல்லூரிகளில் அதிக கல்வி கட்டணம் மாணவர்களிடமிருந்து வாங்குவதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications