மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தமிழக உயர்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தை பொறுத்த வரை 1.75 லட்சம் பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் இதுவரை 1,20,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 509 கல்லூரிகளில், 502 கல்லூரிகள் அண்ணா பல்கலை கழகத்திடம் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை ஒப்படைத்துள்ளன. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, ஒவ்வொரு கல்லூரிகளிலும் 65 சதவீதம் வரை அரசு இடஒதுக்கீட்டில் அளிக்கப்படுவதாக கூறினார்.
அரசு இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் இடங்களில் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும் என்றார். அரசு இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
அரசு வழங்கும் இடஒதுக்கீட்டு இடங்கள் ஏராளமாக காலியாக உள்ளதால், மாணவர்கள் முறையாக விண்ணப்பித்து பலன் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்த புகார்களை தெரிவிக்க, கூடுதல் இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். உயர்கல்வித்துறையின் எச்சரிக்கையையும் மீறி கல்லூரிகளில் அதிக கல்வி கட்டணம் மாணவர்களிடமிருந்து வாங்குவதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications