பட்டப் பகலில் சென்னையில் ஷாக்.. பள்ளி மாணவியை ஆட்டோவில் கடத்த முயற்சி.. குதித்து தப்பி.. பரபரப்பு
சென்னை : சென்னை புது வண்ணாரப்பேட்டை அருகே, ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியை, ஆட்டோவில் இருந்தவர்கள் கடத்த முயன்ற நிலையில், ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவி கீழே குதித்து தப்பிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை கிராஸ்ரோடூ சாலை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல் இன்று அந்த மாணவி பள்ளி செல்வதற்ககாக ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கெனவே 25 வயது மதிக்கதக்க இரு நபர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். அந்த நபர்கள், டோல்கெட்டில் இருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவியை கடத்த முயற்சி
புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது, ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவியை, கைகுட்டை வாயில் வைத்து மூடி, அவர்கள் மாணவியை கடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த மாணவி, தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில், ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், மாணவியின் மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், கீழே விழுந்து கிடந்த மாணவியை தூக்க முற்பட்ட நேரத்தில், ஆட்டோவில் இருந்த அந்த மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். சென்னையின் பரபரப்பான பகுதியில், பட்டப்பகலில் ஓடும் ஆட்டோவில் இருந்து பள்ளி மாணவி கீழே விழுந்ததால், சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
காயமடைந்த மாணவிக்கு முதலுதவி
உடனடியாக அங்கு கூடிய மக்கள், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலிசார் மாணவியை மீட்டனர். பின்னர், காயமடைந்த மாணவிக்கு முதலுதவி அளிக்கும் வகையில், அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரணை
சிகிச்சை அளிக்கபட்டதையடுத்து அந்த மாணவியிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநரான சார்லஸிடமும், போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோவில் கடத்திய நபர்கள் யார்? எதற்காக பள்ளி மாணவியை கடத்தினார்கள்? இதற்கு வேரேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பரபரப்பாக மக்கள் நெருக்கமாக காணப்படும் புதுவண்ணாரப்பேட்டையில், பட்டப் பகலில் மாணவி கடத்தப்பட்ட சம்பவத்ததால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படக் காட்சிகள் போன்று, ஓடும் ஆட்டோவில் மாணவியை, மர்ம நபர்கள் கடத்த முயன்றபோது, ஓடும் ஆட்டோவில் இருந்து பள்ளி மாணவி குதித்து தப்பித்த சம்பவம், புதுவண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications