கோவிலை காண்பித்து இந்தி பேசும் மக்களை திசை திருப்ப பார்க்கிறது பாஜக.. தாக்கி பேசிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கோவிலை காண்பித்து இந்தி பேசும் மக்களை பாஜக திசை திருப்ப பார்க்கிறது. கொரோனா காலத்தில் கூட மக்களை அலைய வைத்தது பாஜக அரசு. கொரோனாவை விட கொடியவர்கள் பாஜகவினர் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- மொழிப்போர் தியாகிகள் நம்மை வழிநடத்துகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழகத்தில் தமிழ் ஆட்சி தொடங்கியது. இந்தி பேசும் மாநிலங்களுக்கு கூட பாஜக எதையும் செய்யவில்லை. இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது.

பாஜவின் இந்த ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவிலை காண்பித்து இந்தி பேசும் மக்களை பாஜக திசை திருப்ப பார்க்கிறது. கொரோனா காலத்தில் கூட மக்களை அலைய வைத்தது பாஜக அரசு. இதனால் தான் சொல்கிறோம்.. கொரோனாவை விட கொடியவர்கள் பாஜகவினர். இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது.
உலகம் முழுவதும் தமிழர்கள் வலம் வர காரணம் இரு மொழி கொள்கையே. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர் கல்வித் துறையில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ் மொழியை புறக்கணித்து இந்திய மொழியை திணிக்க உதவியவர் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications