சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து போலீஸ் செய்த புது விஷயம்.. வாகன ஓட்டிகள் ஹேப்பி
சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் சாலையாகும். மொத்த சென்னையிலுமே ஒப்பிட்டு பார்த்தால், தாம்பரம் முதல் கிண்டி வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் அதிகமாகும். இதனை குறைக்கும் விதமாக ஆலந்தூர் பகுதியில் புதிய யூடர்ன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யூடர்ன் காரணமாக வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
சென்னையில் ஒரு காலத்தில் அண்ணா சாலையில் தான் வாகன நெரிசல் மிக மிக அதிகமாக இருக்கும். அதன்பிறகு கோயம்பேடு வடபழனி சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தது. இதேபோல் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலையிலும், ரேடியல் சாலையிலும், வேளச்சேரி சாலையிலும், பூந்தமல்லி சாலையிலும், ஆற்காடு சாலையிலும் நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சாலைகளையும் விட ஜிஎஸ்டி சாலையில் தான் நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும்.

10 நிமிடம் ஜிஎஸ்டி சாலை நெரிசலால் முடங்கினால், தாம்பரம் முதல் கத்திரப்பாரா வரை ஸ்தம்பித்து போய்விடும்.. ஏனெனில் எல்லா சாலைகளும் திருச்சி சாலையை தொட ஜிஎஸ்டி சாலையில் தான் வந்து சேர வேண்டும். ஓஎம்ஆர், ஈசிஆர் என எந்த பக்கம் இருந்து திருச்சி நோக்கி பயணிக்க வேண்டும் என்றாலும் ஜிஎஸ்டி சாலைக்கு தான் வர வேண்டும்.
ஜிஎஸ்டி சாலையில் மழைக்காலத்தில் சென்றால், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பரத்திற்கோ, கிளாம்பாக்கத்திற்கோ, விமான நிலையத்திற்கோ போக முடியாது.. 10 நிமிடம் முன்பு கிளம்பினால் போதும் என்று நினைத்து வந்த பலர் இன்று வரை விமானத்தை, ரயிலை, பேருந்துகளை தவறவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த அளவிற்கு நெரிசல் மிகுந்த இடமாக மாறிவிடும்.
🚗🔄 New U-Turn on GST Road! 🚗🔄
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) July 20, 2024
Attention Chennai motorists! 📢 A brand-new U-turn has been opened as trial, opposite the Alandur post office on GST Road. 🛣️ This strategic addition aims to facilitate smoother traffic flow for vehicles. 🚙#Chennai #Traffic #Police pic.twitter.com/uCfLI2RVAN
இதில் மிக குறுகலான பகுதி என்றால் இதில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை இணைக்கும் பகுதியான ஆலந்தூர் சந்திப்பு தான், அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் அங்கு மாற்றுத் தீர்வுகளை சென்னை மாநகர போலீசார் முன் வைத்துள்ளனர். அதன்படி ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் தபால் நிலையம் அருகே யூடர்ன் வைத்துள்ளனர். இதன்படி, கிண்டி நோக்கி செல்பவர்கள் இங்கு யூடர்ன் செய்து பயணிக்கலாம். இது பற்றி சென்னை போக்குவரத்து போலீசார் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications