திடீரென இரவோடு இரவாக.. தமிழ்நாடு மின்சார வாரியம் சொன்ன அறிவிப்பு.. நோட் பண்ணுங்க முக்கியம்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன்லைன் இபி பில்லிங் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆன்லைன் மின்சார கட்டண சேவை வேலை செய்யாதது தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
அதில், மதிப்புமிக்க நுகர்வோர்கள் கவனத்திற்கு! முக்கியமான மேம்படுத்தல் காரணமாக ஆகஸ்ட் 17 இரவு 11 மணி முதல் ஆகஸ்ட் 18 காலை 6 மணி வரை எங்கள் ஆன்லைன் சேவைகள் (ஆன்லைன் கட்டணம், கட்டண நிலை சரி பார்த்தல், விண்ணப்பித்தல்) தற்காலிகமாக கிடைக்காது. தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!, என்று அறிவித்து உள்ளனர். இன்று அதிகாலை வரை ஆன்லைன் மின் கட்டணம் வேலை பார்க்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் புதிய முறையில் ரீடிங் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மின்சார வாரியத்தில் பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பும் வெளியாக உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றத்தில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அவர்களின் அறிவுத்தலின் பெயரில் மின்சார களப்பணியாளர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பின்வரும் செயல்களை செய்ய முடியும்.
• மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் மற்றும் கட்டணம் செலுத்திய இணைப்புகள் பற்றிய விபரங்களை அறிய முடியும்.
• மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விபரத்தை அறிய முடியும்.
மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பற்றி அறிய முடியும்.
மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிய முடியும்.
பரிந்துரை; இது போக Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
நிதி அமைச்சகத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த நிறுவனம் சமீபத்தில் மின்சார வாரியத்தில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவில் மின்சார வாரியம் தொடர்பாக முக்கியமான பரிந்துரைகளை அந்த நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications