சென்னையில் 65 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட சலூன் கடைகள், அழகு நிலையங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் 65 நாட்கள் கழித்து சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.

Recommended Video

    தமிழகத்தில் தொடங்கிய போக்குவரத்து..தகவல்கள்

    தமிழகத்தில் 4ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது ஆட்டோக்கள் இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் அதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

    தமிழகத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னையில் முதல்முறையாக ஆட்டோக்கள், கால்டாக்ஸிகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அது போல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். சென்னையில் இன்று முதல் என்னென்ன இயங்கும் என்பது குறித்து அரசு ஆணையை பார்ப்போம். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

    20 சதவீதம் பணியாளர்கள்

    20 சதவீதம் பணியாளர்கள்

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

    குளிர்சாதன இயந்திரங்கள்

    குளிர்சாதன இயந்திரங்கள்

    வணிக வளாகங்கள் (மால்கள்) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

    மளிகைக் கடைகள்

    மளிகைக் கடைகள்

    டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

    மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

    வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் TN E-Pass இன்றி பயன்படுத்தலாம்.

    கால்டாக்ஸி

    கால்டாக்ஸி

    ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது. முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது என ஆணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சலூன்கடைகள் இன்று திறக்கப்பட்டன. கடைகளில் அரசு கூறிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. கால் டாக்ஸிகளில் கட்டண உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கால்டாக்ஸிகள் இயக்கப்படவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+