மின் தடை என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது! மின்வாரிய அதிகாரிகளுக்கு பாடம் நடத்திய தங்கம் தென்னரசு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிக நேரம் மின் தடை ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நடத்திய சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் இதனைக் கூறியிருக்கிறார். ஷட் அவுன் என்ற பெயரில் 8 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுவதாக கடந்த வாரம் ஒன் இந்திய தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல் பிரபல யூடியூபரான இர்பானும் மின் தடை குறித்து மின் வாரியத்தை டேக் செய்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் தான் மின் தடைக்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆர்டர் போட்டுள்ளார். மேலும், 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு அலுவலரிடமும் அமைச்சர் கேட்டறிந்தார். அதேபோல் பொதுமக்களிடமிருந்து மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அனைத்து அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அலுவலர்களிடமும் நேரடியாக அவர்களுடைய பிரிவு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும், வரப்பெற்ற புகார்கள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராவண்ணம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆண்டு, எதிர் வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர் கொள்வதற்கும், மழைக்காலங்களின் போது சீரான மின்விநியோகம் வழங்குவதற்கும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரியான உயரத்தில் மாற்றியமைக்க இடைச்செருகலாக புதிய மின்கம்பங்கள் நிறுவுதல், மின்பகிர்மான பெட்டிகளில் பராமரிப்பு, மரக்கிளைகளை அகற்றுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதனை திட்டமிடலுடன், பொதுமக்களுக்கு உரிய முறையில் முன் அறிவிப்புகள் செய்து, அதிக நேரம் மின்தடை ஏற்படாமலும் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது எனவும், மருத்துவமனைகள், பள்ளிகள், குடிநீர் இணைப்புகள் போன்ற அத்தியாவசிய பணிகள் நடைபெறும் வளாகங்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கண்ட ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" ஒன்றினை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற திங்கட்கிழமை (24.07.2023) முதல் நடத்திட மாண்புமிகு அமைச்சர் உத்தரவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications