களைகட்டும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி...சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இந்தப் போட்டித் தொடரில், இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர்லாந்து உள்பட 189 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவற்காக, சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தானை அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மாரத்தானில், ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செஸ் ஒலிம்பிக்கிற்கான விழிப்புணர்வு ஓட்டமாக இந்த சிறப்பு ஓட்டம் அமைந்துள்ளது. மேலும் வெற்றிக்கான தொடக்கமாக இந்த சிறப்பு ஓட்டம் அமைந்துள்ளது. செஸ் விளையாட்டு வீரர்கள் நட்சத்திர விடுதிகள் உட்பட 24 இடங்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட உள்ளனர். 344 மருத்துவ பணியாளர்கள் கொண்டு வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ முகாம்கள் உட்பட தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், போட்டியில் கலந்துகொள்ளும் சர்வதேச வீரர்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் இந்த பிரம்மாண்ட போட்டி களைகட்ட தொடங்கியுள்ளது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications