அயோத்தி தீர்ப்பு நல்ல தீர்ப்புதான்.. மக்கள் அமைதி காக்க வேண்டும்.. வைகோ கருத்து!
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான். இந்தியாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். அதில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான். இந்தியாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை இந்தியாவில் பெரும்பான்மையினர் அரவணைத்து செல்ல வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும். திமுக மதிமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. திமுக அணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பின் காஷ்மீர் பிரச்சனையின் போது, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ததற்காக வைகோவிற்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் சண்டை வந்தது. மாறி மாறி மதிமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் சண்டை போட்டனர்.
இதனால் திமுக கூட்டணி உடைக்கிறதா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று வைகோ குறிப்பிட்டு இருக்கிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications