அயோத்தி தீர்ப்பு நல்ல தீர்ப்புதான்.. மக்கள் அமைதி காக்க வேண்டும்.. வைகோ கருத்து!
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான். இந்தியாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். அதில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியது நல்ல தீர்ப்புதான். இந்தியாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை இந்தியாவில் பெரும்பான்மையினர் அரவணைத்து செல்ல வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும். திமுக மதிமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. திமுக அணியில் மதிமுக தொடர்ந்து நீடிக்கும். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பின் காஷ்மீர் பிரச்சனையின் போது, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ததற்காக வைகோவிற்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் சண்டை வந்தது. மாறி மாறி மதிமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் சண்டை போட்டனர்.
இதனால் திமுக கூட்டணி உடைக்கிறதா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று வைகோ குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications