சென்னையே துள்ளுது.. 4 நாள் விடுமுறையில் திணறும் தமிழகம்.. அலர்ட் ஆன போலீஸ்..தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆயுதபூஜை இந்த வருடம் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமையாக வருகிறது.. அதேபோல, விஜயதசமி மறுநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்தமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு என மொத்தமாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன..

4 நாள் விடுமுறை: அதனால், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதில், ரெயில்களில் டிக்கெட் புக்கிங் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. அரசு பஸ்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளிவிடும். எனவே, நெரிசலை குறைக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் சிறப்பு பேருந்துகளால் பொதுமக்கள் நிம்மதியடைந்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள்: இதனிடையே, கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்கள் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில், தமிழக போலீசார் விழிப்பாகி உள்ளனர்.. அந்தவகையில், விடுமுறை நாட்களில், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் இதற்கான அதிரடியை கையில் எடுத்துள்ளனர்.. அதேபோல, போக்குவரத்து போலீஸார் வாகனங்களையும், பயணிகளையும் ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்: முன்னதாக, ஆயுத பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவைகள் குறித்த அறிவுறுத்தல்களையும் காவல்துறைக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications