மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு!
சென்னை: ஏழை எளிய சாமானிய மக்களின், மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சம்தான், 'ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ்'. இந்த காப்பீடு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு தற்போது முக்கிய அப்டேட்டை கொடுத்திருக்கிறது.
தற்போதுவரை, இந்த இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சை பெறுபவர்கள், காப்பீட்டு தொகை அங்கீகரிக்கப்படும் வரை மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இனி வரும் நாட்களில் இதனை தானியங்கி முறைக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ்
எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசால் வழங்கப்படும் மருத்துவ காப்பீடுதான் 'ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ்'. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சையை இலவசமாக செய்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, இதில் சேர வயது வரம்போ, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கோ கட்டுப்பாடுகள் கிடையாது என்பதுதான்.
புதிய அப்டேட்
இந்த இன்சூரன்ஸ்படி, சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தற்போது சில சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அதாவது, சிகிச்சை செலவுகள் ஏற்கப்படும் வரை, சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள், எப்போது சிகிச்சை முடியும் என்று காத்திருப்பார்கள். இப்படி சிகிச்சை முடிந்தும் இன்சூரன்ஸ் தொகை கிளியர் ஆகும் வரை காத்திருப்பது கடுப்பாக இருக்கும். இந்த சிக்கலை சரி செய்ய இனி தானியங்கி முறையை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
பயனாளர்களுக்கு பெரிய நிம்மதி
மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, இனி மருத்துவமனையில் காப்பீடு தொகை கிளியர் ஆகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தனியங்கி முறையை அமல்படுத்த, தேசிய சுகாதார ஆணையம் சார்பில் சிறப்பு போட்டி நடத்தப்படுகிறது. பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடைபெறும் இந்த போட்டியின் மூலம், கோடிக்கணக்கான டேட்டாக்களை சீக்கிரமாகவும், பிழையின்றியும் கையாளக்கூடிய தொழில்நுட்ப தீர்வுகள் உருவாக்கப்பட இருக்கின்றன.
தானியங்கி முறை எவ்வளவு சீக்கிரம் அமல்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் நோயாளிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக் -
மாறப்போகிறதா இந்திய நேரம்? உஜ்ஜயினி டூ கிரீன்விச்.. மத்திய அரசின் 'மஹாகால்' பிளான் -
ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்?












Click it and Unblock the Notifications