'பாஷ்யம்' பெயர் அதிரடி நீக்கம்.. இனி "கோயம்பேடு மெட்ரோ" மட்டுமே.. மாறிய காட்சிகள்
சென்னை :கோயம்பெடு மெட்ரோ நிலையம் அண்மையில் புனரமைக்கப்பட்டது. தற்போது கோயம்பெடு மெட்ரோ நிலையத்தின் முன்பு இருந்த பாஷ்யம் என்ற பெயர் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " எனப் பெயர் மாற்றப்பட்டது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ " யார் இந்த பாஷ்யம், தமிழகத்திற்கு செய்த தியாகம் என்ன " என மெட்ரோ ரயில் பெயர் மாற்றத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

பெயருக்கு என்ன காரணம்
" பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " பெயர் வருவதற்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் சில தகவலகள் வேகமாக பரவின. அதாவது யார் இந்த "பாஷ்யம்" ?. பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா 1932-ம் ஆண்டில் வெள்ளையன் ஆட்சியில் தனி ஆளாக சென்னை கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றியவர் என்றும், அவரின் நினைவாக கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு பெயர் மாற்றப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது

விளம்பரதாரர்
ஆனால் சமுக வலைதளங்களில் பரவிய தகவல் பொய்யானது என்பது பின்னாளில் சென்னை மெட்ரோ அளித்த விளக்கத்தில் தெரியவந்தது.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " எனப் பெயர் மாற்றப்பட்டதற்கு பாஷ்யம் என்ற கட்டுமான நிறுவனம் கோயம்பேடு மெட்ரோவின் விளம்பரதாரராக சேர்ந்ததுதான் காரணம் என்பது தெரியவந்தது.

விளம்பரம் கிடைத்தது
நந்தனம் மற்றும் ஏஜி-டிஎம்ஸ் மெட்ரோ நிலையங்களுக்கு அடுத்து கோயம்பேடு நிலையத்திற்கும் விளம்பரதாரர் கிடைத்தார். ரயில் நிலையத்துடன் நிறுவனத்தின் பெயரை சேர்த்து விளம்பரம் செய்யும் உரிமை (செமி நேமிங் உரிமம்) கிடைத்தது. அதாவது. கோயம்பேடு நிலையத்திற்கான செமி நேமிங் உரிமத்திற்கான ஒப்பந்ததை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் பெற்றது. அதனால் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் அப்போது விளக்கம் அளித்தார்கள்.அதன்பிறகு சர்ச்சை ஓய்ந்தது.

மாறிய பெயர் பலகை
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் மீண்டும் புணரமைக்கப்பட்டது. புணரமைக்கப்பட்ட பின்னர் " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " என்ற பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ என்று மீண்டும் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications