Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணத்தை திருப்பி கொடுத்து சமரசம்.. இல்லாத கவுன்சிலில் பதவி பெற பணம் பெற்ற வழக்கு: ஜாமீன் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தில் நடிகை நமீதா, அவரது கணவர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் (MSME Council) என்ற அமைப்பின் தேசிய தலைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், தேசிய செயலாளராக உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

Bail denied to msme council fraud gang who misusing government emblem

இந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நடிகை நமீதா, அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த அமைப்பின் மாநில தலைவராக வீரேந்திர சவுத்ரி உள்ளார். அரசு முத்திரை, தேசியக்கொடி, பிரதமர் படம், எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதாகவும், இதை நம்பி சிறு குறு முதலீட்டாளர்கள் அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் தந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

அப்படி தன்னிடம் இருந்து 50 லட்ச ரூபாயை வசூலித்த முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர், அதில் 9 லட்சம் ரூபாயை மட்டுமே திருப்பிக் கொடுத்த நிலையில் மீதத் தொகையை திருப்பி வழங்கவில்லை என சூரமங்கலம் காவல் துறையில் கோபால்சாமி என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ் ஆஜராகி, மத்திய அரசின் கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், காவல்துறை மிகைப்படுத்தி காட்டி வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் எந்த மோசடியும் இல்லை, பணம் வாங்கிய புகாரில் பணத்தைத் திருப்பி கொடுத்ததால் சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறக்கட்டளைக்கு மத்திய, மாநில அரசுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதுபோன்ற பெயரைக் கொண்ட அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் எனக்கூறி பிரதமரின் புகைப்படம், அரசின் சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளதால், அரசின் முக்கிய பிரமுகர் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும் அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மத்திய - மாநில அரசுகளின் எந்த அங்கீகாரமும் இல்லாத ஒரு அமைப்பு, அரசின் சின்னங்களைப் பயன்படுத்துவதும், பதவிக்காக பணம் பெறுவதும், விஐபி அல்லது உயர் பதவியில் உள்ளவர் போல மாயத் தோற்றத்தை உருவாக்குவதும் அவமானகரமானது எனக் கூறி இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+