முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா?
Recommended Video

சென்னை: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு ஒசூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் சென்டிமென்ட்டல் டச் வொர்க் அவுட் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக, திமுக, அமமுக ஆகியன வெளியிட்டன. இந்த நிலையில் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டன.
இந்த நிலையில் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு பெண் வேட்பாளர் ஜோதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக. இவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதியாவார்.

நெருக்கம்
ஜோதி பொது வாழ்வில் அனுபவம் வாய்ந்தவர். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். ஆனால் இதே தொகுதியில் போட்டியிட அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிறைய ஆர்வம் காட்டினார். ஆனால் பாலகிருஷ்ணா அதிமுக தலைமைக்கு தந்த நெருக்கடியால் இந்த சீட்டை வாங்கி.. விட்டதை பிடித்துவிட்டார்!

3 ஆண்டுகள் சிறை
வழக்கின் பின்னணி: 20 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது.

திமுக நகர பொறுப்பாளர்
இதையடுத்து ஒசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட திமுக நகர பொறுப்பாளர் சத்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்குகள்
பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ அகால மரணம் அடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டதாலோ அல்லது எதிர்க்கட்சியினரால் தாக்கப்பட்டாலோ அந்த காரணத்தை காட்டி அவர் சார்ந்த குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும். சென்டிமென்ட் காரணமாக மக்களும் ஓட்டு போட்டுவிடுவார்கள். இதற்கு உதாரணமாக எத்தனையோ வழக்குகளை சொல்லலாம்.

எப்படி அனுதாபம்
ஆனால் இங்கு கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டியோ தமிழக- கர்நாடக எல்லையில் நடந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் சிறை சென்றவர். எனவே இவர் மீது எப்படி மக்களுக்கு அனுதாபம் ஏற்படும்.

அதிமுகவினருக்கு
இந்த தாக்குதலால் எத்தனை பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பர். அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அதிமுக எப்படி ரெட்டியின் மனைவிக்கு சீட் வழங்கியது என்பது அதிமுகவினருக்கே புரியாத புதிராக உள்ளது. எல்லாம் நன்மைக்கே என்பதை போல் ஜோதியை நிறுத்தியதன் மூலம் திமுகவுக்கு வெற்றியை அதிமுக இப்போது தேடி தந்து விட்டதாக திமுகவினர் கருதுகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications