முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா?
Recommended Video

சென்னை: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு ஒசூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் சென்டிமென்ட்டல் டச் வொர்க் அவுட் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக, திமுக, அமமுக ஆகியன வெளியிட்டன. இந்த நிலையில் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டன.
இந்த நிலையில் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு பெண் வேட்பாளர் ஜோதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக. இவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதியாவார்.

நெருக்கம்
ஜோதி பொது வாழ்வில் அனுபவம் வாய்ந்தவர். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். ஆனால் இதே தொகுதியில் போட்டியிட அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிறைய ஆர்வம் காட்டினார். ஆனால் பாலகிருஷ்ணா அதிமுக தலைமைக்கு தந்த நெருக்கடியால் இந்த சீட்டை வாங்கி.. விட்டதை பிடித்துவிட்டார்!

3 ஆண்டுகள் சிறை
வழக்கின் பின்னணி: 20 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது.

திமுக நகர பொறுப்பாளர்
இதையடுத்து ஒசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட திமுக நகர பொறுப்பாளர் சத்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்குகள்
பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ அகால மரணம் அடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டதாலோ அல்லது எதிர்க்கட்சியினரால் தாக்கப்பட்டாலோ அந்த காரணத்தை காட்டி அவர் சார்ந்த குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும். சென்டிமென்ட் காரணமாக மக்களும் ஓட்டு போட்டுவிடுவார்கள். இதற்கு உதாரணமாக எத்தனையோ வழக்குகளை சொல்லலாம்.

எப்படி அனுதாபம்
ஆனால் இங்கு கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டியோ தமிழக- கர்நாடக எல்லையில் நடந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் சிறை சென்றவர். எனவே இவர் மீது எப்படி மக்களுக்கு அனுதாபம் ஏற்படும்.

அதிமுகவினருக்கு
இந்த தாக்குதலால் எத்தனை பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பர். அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அதிமுக எப்படி ரெட்டியின் மனைவிக்கு சீட் வழங்கியது என்பது அதிமுகவினருக்கே புரியாத புதிராக உள்ளது. எல்லாம் நன்மைக்கே என்பதை போல் ஜோதியை நிறுத்தியதன் மூலம் திமுகவுக்கு வெற்றியை அதிமுக இப்போது தேடி தந்து விட்டதாக திமுகவினர் கருதுகின்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications