இனி ரோட்டுல பள்ளம் தோண்டக் கூடாது.. சென்னை மாநகராட்சி கமிஷனர் அதிரடி உத்தரவு! பின்னணி என்ன?
சென்னை: சென்னையில் சாலைகளை தோண்ட தடை விதித்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் 30ஆம் தேதி முதல் பள்ளம் தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சென்னையில் சாலைகளில் பள்ளம் தோண்ட தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான சாலைகள், உட்புறச் சாலைகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சேவைத் துறைகள், சாலைகளில் பள்ளம் தோண்ட தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ள துணை ஆணையர், வட்டார துணை ஆணையர்கள் மூலமாக ஆணையாளர் அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இந்த சமயத்தில் சாலைகளில் பள்ளம் தோண்டினால் அதில் மழைநீர் தேங்கும், அதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications