தரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்!
பெங்களூரில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்று நேற்று மயிரிழையில் மிகப்பெரிய விபத்து ஒன்றில் இருந்து தப்பித்து இருக்கிறது.
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்று நேற்று மயிரிழையில் மிகப்பெரிய விபத்து ஒன்றில் இருந்து தப்பித்து இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அதிகாலையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அந்த இண்டிகோ விமானம் புறப்பட்டுள்ளது. மதியம் அந்த விமானம் சரியாக சென்னையை அடைந்தது.
சென்னை கிண்டி வந்த விமான தரை இறங்கும் முன் முக்கியமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

என்ன நடந்தது
முதலில் சென்னை விமான நிலையத்தில் உள்ள இரண்டாவது ரன் வேயில் விமானம் இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து விமானமும் வேகமாக ரன் வேயை நோக்கி வந்துள்ளது. ஆனால் ரன் வே அருகில் வந்து 500 மீட்டர் உயரும் இருக்கும் போது மீண்டும் விமானம் மேலே சென்றது.

மீண்டும் சென்றது
அந்த இண்டிகோ விமானம் மீண்டும் டேக் ஆப் செய்து, வானத்தை நோக்கி சென்றது. அதன்பின் 20 நிமிடம் வட்டம் அடித்துவிட்டு அந்த விமானம், சென்னை விமான நிலையத்தை நோக்கி திரும்பியது. பின் மீண்டும் சரியாக இரண்டாவது ரன் வேயில் தரையிறக்கப்பட்டது.

காரணம்
முதல்முறை அந்த விமானம் தரையிறக்கும் போது, அது சரியாக ரன் வேயை நோக்கி வரவில்லை. ரன் வே சாலையை விட்டு விலகி சென்றது. விமானி சரியாக கணிக்காமல் விமானத்தை இயக்கியதால் இப்படி நடந்து இருக்கிறது. இதனால்தான் விமானம் மீண்டும் மேலே சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது.

பிரச்சனை இல்லை
இந்த வேகமான செயல்பட்டால் நேற்று மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் மீது தவறு என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications